Watch Video: வாழ்க்கை `கேஜிஎஃப்’ மாதிரி போகுது.. சிரித்துக்கொண்டே சீரியஸான விஷயத்தை போட்டுடைத்த சமந்தா!
இந்நிகழ்ச்சியின் ப்ரோமோவில் பலரது மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வுக்கு கரண் தான் காரணம் என சமந்தா கூறியுள்ளார்.
நடிகை சமந்தா திருமண வாழ்வு குறித்து நகைச்சுவையாகக் கூறியுள்ள காமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான, பலராலும் கொண்டாடப்படுகிற `காஃபி வித் கரண்’ ஷோ மீண்டும் ஒளிபரப்பாகிறது.
பங்கேற்கும் பிரபலங்கள்
இந்நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், ஆலியா பட், ஷாஹித் கபூர், சாரா அலி கான், அக்ஷய் குமார், டைகர் ஷ்ரோஃப், க்ரித்தி சனோன், விஜய் தேவரகொண்டா முதலான பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் குறித்த எபிசோட்கள் அடுத்தடுத்த வாரங்களில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் புஷ்பா, இணைய தொடர்கள் என பான் இந்தியா ஸ்டாராகக் கலக்கி வரும் தென்னிந்திய நடிகையான சமந்தா இந்த ஷோவில் பங்கேற்றுள்ளார்.
கரணை சாடியா சமந்தா
சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட மண முறிவுக்குப் பின்னர் சமந்தா முழு வீச்சில் படங்களில் நடித்து வரும் நிலையில், முன்னதாக வெளியான இந்நிகழ்ச்சியின் ப்ரோமோவில் பலரது மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வுக்கும் கரண் தான் காரணம் என சமந்தா கூறியுள்ளார்.
”நீங்கள் வாழ்க்கையை உங்கள் `கபி குஷி கபி கம்’ படத்தைப் போல இருப்பதாகக் காட்டியிருக்கிறீர்கள்.. ஆனால் உண்மையில் வாழ்க்கை `கேஜிஎஃப்’ போல இருக்கிறது” என ஜாலியாக கரணை சமந்தா சாடியுள்ளார்.
View this post on Instagram
குடும்ப அமைப்பு, பாசம் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் கரண் ஜோஹரின் ’கபி குஷி கபி கம்’ படம் 2001ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்