Baakiyalakshmi Serial Rithika: இனி அவருக்கு பதில் இவர் - பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகிய முக்கிய நடிகை...
பாக்கிய லட்சுமி சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகி உள்ளதாகவும் அவருக்கு பதில் காற்றுக்கென்ன வேலி தொடர் நடிகை கமிட்டாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பல மாதங்களாக மாஸ் காட்டி வந்த பாக்கியலட்சுமி தொடர் தற்போது டி.ஆர்.பியில் தற்போது சற்று பின் தங்கி உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை தொடர்ந்து விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் முதல் இடத்திற்கு முன்னேறி வருகிறது. இதற்கு பாக்கிலட்சுமி சீரியலி ஏற்பட்டுள்ள தொய்வு தான் காரணம். இந்த தொடர் கடந்த சில மாதங்களாக மிக பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் இப்போது சீரியல் அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைத்துக் கொண்டிருக்கிறது.
அதேபோல பாக்கியா கல்லூரிக்கு செல்வதால், எழில் மனைவி அமிர்தா, அவருக்கு பதிலாக கேன்டீனை பார்த்துக் கொண்டார். அந்த அளவிற்கு முக்கியமான இந்த கேரக்டரில் நடிகை ரித்திகா நடித்து வந்தார். இந்நிலையில் அவர் சீரியலில் இருந்து தற்போது விலகியுள்ளார். ரித்திகாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர் தற்போது சீரியலில் இருந்து திடீரென விலகிஉள்ளதாஅகவும், அவருக்கு பதிலாக காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்துவரும் அக்ஷிதா அசோக் அந்த கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை அறிந்த நடிகை ரித்திகாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருசிலர் நடிகை ரித்திகாவுக்காவே தாங்கள் பாக்கிய லட்சுமி சீரியலை பார்த்து வந்ததாகவும் அவரை மாற்ற வேண்டாம் எனவும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் நடிகை ரித்திகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அலட்டல் இல்லாத அவரின் குணம், ஹோம்லியான லுக் போன்ற அவரின் சில தனித்தன்மைகள் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுத் தந்தது. இதனையடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வந்த ரித்திகா தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
பாக்கியலட்சுமி சீரியல் ஒரு சாதாரண குடும்பத்து பெண்ணை மையமாக கொண்ட கதை. அவரின் கணவர் அவரை பிரிந்த நிலையில் பாக்கியலட்சுமி தன் சொந்த காலில் நின்று குடும்பத்தை எப்படி வழி நடத்துகின்றார் என்பது தான் இந்த தொடரின் மையக்கரு. கேட்டரிங் தொழில் செய்து தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பக்கியா கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கதாப்பாத்திரத்திற்காகவே ஏராளமானோர் சீரியல் பார்க்கத் தொடங்கினர்.
தொடர்ந்து பல மாதங்களாக சேனலில் நம்பர் ஒன் சீரியலாக இருந்த பாக்கியலட்சுமி தொடர் இப்போது கதைக்களத்தில் ஏற்பட்டுள்ள சிறிய தொய்வின் காரணமாக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் விறுவிறுப்பான கதைக்களத்தின் மூலம் இந்த சீரியல் முதல் இடத்திற்கு முன்னேறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















