புகழை விட தன்மானமே முக்கியம்...ஜான்வி கபூருக்கு நித்யா மேனன் செம அடி
பெத்தி படத்தில் நடிகை ஜான்வி கபூரின் கிளாமர் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகை நித்யா மேனன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்

பெத்தி பட சர்ச்சை குறித்து பேசிய அவர் சினிமாவில் பெண்கள் கவர்ச்சியாக சித்தரிக்கப்படுவது தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் நிலவும் வணிக போக்கு என கூறியுள்ளார்.
ராம் சரண் நடித்துள்ள பெத்தி திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூரின் கதாபாத்திர சித்தரிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் நடிகைகள் கவர்ச்சி பண்டங்களாக மட்டுமே பயன்படுத்தி வருவதற்கு எதிராக ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இதனால் பெத்தி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளில் திருத்தம் செய்யவிருப்பதாக படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா தெரிவித்திருந்தார். நடிகை நித்யா மேனன் பெத்தி பட சர்ச்சை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பெண்கள் சித்தரிப்பு குறித்து நித்யா மேனன்
சினிமாவில் பெண்கள் கவர்ச்சி பண்டமாக சித்தரிக்கப்படுவது குறித்து பேசிய நித்யா மேனன் " வணிகரீதியாக வெற்றி பெற்று, பார்வையாளர்களைக் கவரும் எதுவாக இருந்தாலும், அது பெரும் வெற்றிக்காக அடிக்கடி பின்பற்றப்படுகிறது. இது வரம்பு மீறிய செய்லா என்று கேட்டால் நிச்சயமாக. நடிகர்களுக்கு தங்களுக்கென சில வரம்புகள் இருக்க வேண்டும். ஒரு காட்சியில் நடிக்கும் நபர், தன்னை ஒரு பொருளாகப் பார்ப்பதை விரும்பவில்லை என்று உறுதியாகக் கூறக்கூடியவராக இருக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். நீங்கள் இது போன்ற வர்த்தகப் படங்களில் நடித்துவிட்டு, திடீரென்று அது உங்களுக்குச் சரியில்லை என்று தோன்றினால், உங்களை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் போகலாம். ஒரு சூழ்நிலையில் நீங்கள் உதவியற்ற நிலையில் முடிந்துவிடுகிறீர்கள் என்பதையும் நான் நம்பவில்லை. உங்களால் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அது அந்த நபரின் முன்னுரிமை என்ன என்பதைப் பொறுத்தது. நான் சில வகையான படங்களில் நடிக்காததால், எனக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை தவறவிடுகிறேனா என்றால் ஆமாம் தான். ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் புகழை விட நான் தன்மானத்தை தான் தேர்ந்தெடுக்கிறேன். நீங்கள் ஒரு முன்னணி நட்சத்திரமாக மட்டுமே இருக்க விரும்பி, அதை அடைய எதையும் செய்யத் தயாராக இருந்தால், அது நீங்கள் எடுக்கும் முடிவுதான்." என கூறியுள்ளார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















