மேலும் அறிய

Prashanth Rangaswamy: "இப்போ அது தாயில்லா குழந்தை" யூ டியூபர் பிரசாந்தை விளாசிய பாடகி சின்மயி!

குழந்தை தவறி விழுந்ததால் விமர்சிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அந்த பெண்ணை விமர்சித்த பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்டவர்களை கடுமையாக சாடியுள்ளார் பாடகி சின்மயி.

கைதவறி விழுந்த குழந்தை

கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டு கூரையில் கைக் குழந்தை தவறிவிழுந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளானது. அங்கு வசித்தவர்கள் பல முயற்சிகளுக்குப் பிறகு அந்த குழந்தையை மீட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிகழ்வு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது குழந்தையில் தாய் ரம்யா ஒரு கையில் குழந்தையை வைத்திருந்து  இன்னொரு கையில் துடைப்படத்தை எடுக்க முயன்ற போது கைதவறி குழந்தை வீட்டு கூரையில் விழுந்ததாக தெரியவந்தது.

அதிர்ஷ்டவசமாக குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டாலும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ளாதது குறித்து பலவிதமான கருத்துக்கள் சமுக வலைதளங்களில் பகிரப்பட்டன. பிரபல திரைப்பட விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் தளத்தில் ‘உங்களுக்கு எல்லாம் குழந்தை ஒரு கேடா’ என்று பதிவிட்டிருந்தார். 

மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட குழந்தையின் தாய் 

கோயம்புத்தூர் காரமடையை சொந்த ஊராக கொண்டவர்கள் வெங்கடேசன் மற்றும் ரம்யா தம்பதியினர். இவர்கள் சென்னையில் திருமுல்லையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்கள். இந்த நிகழ்வு நடந்தைத் தொடர்ந்து தங்களது சொந்த ஊரான காரமடைக்குச் சென்று தங்கியுள்ளார்கள். இப்படியான நிலையில் வீட்டில் அனைவரும் வெளியே சென்று திரும்பியபோது ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தகவல் நேற்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவல் துறை விசாரணை மேற்கொண்டதில் குழந்தை விழுந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக வந்த விமர்சனங்களால் மன உளைச்சல் அதிகமாகி ரம்யா தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது. ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை மீட்டு வெறும் விமர்சனங்களால் ஒரு உயிரை எடுத்துவிட்டுள்ளது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரம்யாவின் தற்கொலையை குறிப்பிட்டு பாடகி சின்மயி சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி உட்பட பலரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இப்போ உங்களுக்கு மகிழ்ச்சியா ?

தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சின்மயி  “ இந்த விவகாரத்தில் குழந்தையின் பெற்றோர்களை விமர்சித்த பிரசாந்த் உள்ளிட்டவர்கள் இனி மகிழ்ச்சியாக கொண்டாடலாம் . இப்போது அது தாயில்லா குழந்தை” என்று பதிவிட்டுள்ளார்.

எதற்கெடுத்தாலும் பொங்கும் நெட்டிசன்கள் 

ஒரு நிகழ்வு பற்றி எந்த வித பின்னணியும் தெரிந்துகொள்ளாமல் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை மட்டும் வைத்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை திணிக்கும் போக்கு தொடர்ச்சியாக நடந்துகொண்டு வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் இப்படியான விபத்துக்கள் சில நேரங்களில் யார் கட்டுப்பாட்டிலும் இருப்பவை அல்ல என்பதை கருத்திக் கொள்ளாமல், தங்கள் சமூக அக்கறையை கோபத்தை வாய்க்கு வந்த வார்த்தைகளால் வெளிப்படுத்துவது ஒரு பெண்ணை தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டியுள்ள நிகழ்வு இணையச் சமூகம் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறது என்கிற கேள்வியையே எழுப்புகிறது.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget