அது நடந்ததுல இருந்து நொறுங்கிட்டாரு...ஶ்ரீ வாய்ப்பை தட்டிப் பறித்த சிவகார்த்திகேயன்...?
சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தில் ஶ்ரீ ஒரு கேரக்டரில் நடிக்க இருந்ததாகவும் சிவகார்த்திகேயன் அவரை நடிக்க விடாமல் செய்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றன

நடிகர் ஶ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ஶ்ரீ . தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் , வில் அம்பு , இறுக பற்று ஆகிய படங்கள் இவருக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்று தந்தன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஶ்ரீ அந்த நிகழ்ச்சியை விட்டு ஒரு சில நாட்களில் வெளியேறினார். ஶ்ரீயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. உடல் மெலிந்த நிலையில் நீண்ட தலைமுடியும் ஶ்ரீ வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது உடல் நலத்தைப் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் அவர் பாலின மாற்று சிகிச்சை செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஶ்ரீ நிலைமைக்கு யார் காரணம்
ஶ்ரீயின் நண்பர்கள் பலர் அவரை தொடர்புகொள்ள முயற்சித்தும் அவரை ரீச் செய்யமுடியாதது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஶ்ரீயின் இந்த நிலைமைக்கு பல விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. ஶ்ரீக்கு ஸ்கிஸோஃபெர்னியா பாதிப்பு இருந்ததாகவும் யாரோ அவர் காதில் பேசுவது போல் அவருக்கு கேட்பதாக இருந்ததாகவும் ஶ்ரீயின் நண்பர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தவிர்த்து ஶ்ரீ நடித்த வில் அம்பு , இறுக பற்று படங்களுக்கு அவருக்கு சம்பளம் வழங்காதது அவரை விரக்திக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஶ்ரீ குர்காவில் ஒரு சின்ன வேலை செய்துகொண்டு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஶ்ரீயின் நண்பர் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளார்
ஶ்ரீயின் வாய்ப்பை பறித்த சிவகார்த்திகேயன் ?
ஒரு பெரிய நடிகரின் படத்தில் ஶ்ரீ நண்பர் கேரக்டரில் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அந்த நடிகர் அவர்களுக்குள்ளே பேசி ஶ்ரீயை நடிக்கவிடாமல் செய்துவிட்டதாக அவரது நண்பர் தெரிவித்தார். இதனால் ஶ்ரீ மனதளவில் நொறுங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் ஶ்ரீ நடிக்க இருந்ததாகவும் சிவகார்த்திகேயன் தலையீட்டால் அவருக்கு இந்த வாய்ப்பு பறிபோனது என்றும் தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து சிவகார்த்திகேயன் தரப்பில் இதுவரை விளக்கமளிக்கப் படவில்லை.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

