மேலும் அறிய

S. J. Suryah: ‘கடவுள் கண்ணை பறித்து கீழே இறக்கி விட்டார்’ .. சினிமா வாழ்க்கை குறித்து எஸ்.ஜே.சூர்யா உருக்கம்..!

ரசிகர்கள் எனக்கு கொடுத்துள்ள அங்கீகாரத்தை சரியாக பயன்படுத்தி கொள்வேன் என மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். 

ரசிகர்கள் எனக்கு கொடுத்துள்ள அங்கீகாரத்தை சரியாக பயன்படுத்தி கொள்வேன் என மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். 

இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா, செல்வராகவன், ஒய்.ஜி.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘மார்க் ஆண்டனி’ . இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது.  ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 

செல்போன் மூலம் டைம் டிராவல் என்ற அடிப்படையிலான கதையில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக 80களில் நடக்கும் காட்சிகளுக்காக மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவின் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது. இதில் சில்க் வேடத்தில் அவரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட விஷ்ணு பிரியா நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி வரை வசூலித்ததாக விஷால் கூறியுள்ளார். 

இப்படியான நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா தன் திரையுலக பயணம் குறித்து மிகவும் உருக்கமாக பேசினார். அதாவது, “மார்க் ஆண்டனி படத்துக்கு  நல்ல விமர்சனங்கள், வசூல், பாராட்டு எல்லாம் கிடைக்குது. அதையெல்லாம் விட எல்லோரையும் கவலைகளை மறக்க வச்சு, மனசு விட்டு சிரிக்க வைத்திருக்கிறது என நினைக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. நான் விஷாலிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

நமக்குள் இருக்கும் இந்த அன்பான உறவு எப்போதும் தொடர வேண்டும். அவதூறான பேச்சுகளால் எதுவும் மிஸ் ஆகி விட கூடாது. நாம இன்னும் 2 படங்கள் இல்லை, 20 படங்கள் கூட சேர்ந்து பண்ணலாம். ஸ்கிரீனில் இவ்வளவு பெரிய ஸ்பேஸ் கொடுத்த உங்கள் பரந்த மனதை பார்க்கும்போது எனக்கு,   'இவன்தான்டா ஹீரோ' என சொல்ல தோன்றுகிறது. 
 
மேலும் ஒரு சிறந்த நடிகனாக வர வேண்டும் என ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த காலத்தில் இருந்தே பல வருடமாக போராடிக் கொண்டிருக்கிறேன். 2004 ஆம் ஆண்டு நியூ படமும், 2005 ஆம் ஆண்டு அன்பே ஆயிருரே படமும் நான் ஹீரோவாக நடித்து வெளியாகி பட்டையை கிளப்பியது. கோயம்புத்தூரில் அன்றைக்கு பெரிய ஸ்டார் படங்கள் ரூ.1.4 கோடி வியாபாரமான நிலையில், என் படம் ரூ.1 கோடிக்கு வியாபாரம் ஆனது. இப்படி கடவுள்  உச்சத்திற்கு என்னை கொண்டு சென்று விட்டு கண்ணை பறித்து கீழே இறக்கி விட்டார். பல வருடங்கள் காணாமல் போன நீண்ட இடைவெளிக்குப் பிறகு `இசை', `இறைவி' படங்கள் மூலம் மீண்டு வந்தேன்.

இறைவி படத்தின் மூலம் தான் என் வாழ்க்கை மீண்டும் ஆரம்பித்தது. கார்த்திக் சுப்பராஜூக்கு நன்றி. இதனைத் தொடர்ந்து பல பெரிய இயக்குநர்கள் படங்களில் நடித்து மாநாடு, இப்போ மார்க் ஆண்டனி வரை வந்துள்ளேன். நான் அடிக்கடி கடவுளிடம், ‘என்னை மிகவும் ரசித்த மக்கள் மனதில் மீண்டும் எனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்காதா?’ என கேட்பேன். அது மார்க் ஆண்டனி படம் மூலம் சாத்தியமாகியுள்ளது. ரசிகர்கள் எனக்கு கொடுத்துள்ள அங்கீகாரத்தை சரியாக பயன்படுத்தி உங்களை மகிழ்ச்சியடைய செய்வேன் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: Cool Suresh: கூல் சுரேஷின் சர்ச்சை செயல்.. இனிமேல் ‘பளார்’ தான்.. தொகுப்பாளினி ஐஷ்வர்யா ரகுபதி எச்சரிக்கை..!

தலைப்பு செய்திகள்

Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 3,200 ரூபாய் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 3,200 ரூபாய் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ..
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
Embed widget