மேலும் அறிய

Sasikumar: “இனி அயோத்தி மாதிரி நல்ல படங்களை தருவேன்” ... சசிகுமார் பேச்சால் ரசிகர்கள் உற்சாகம்...

அயோத்தி படத்தின் வெற்றியை மக்கள் தங்களுக்கான வெற்றியாக கொண்டாடினார்கள் என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். 

அயோத்தி படத்தின் வெற்றியை மக்கள் தங்களுக்கான வெற்றியாக கொண்டாடினார்கள் என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். 

அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அயோத்தி'. தியேட்டர்களில் ரிலீசான இந்த படத்தில் புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி பல பிரபலங்களும் அயோத்தி படத்தை பாராட்டி தள்ளினர். 

இந்த படம் ரிலீசான சமயத்தில் கடும் சர்ச்சையில் சிக்கியது. எழுத்தாளர் நரன், தன்னுடைய வாரணாசி கதை அப்படியே அயோத்தி கதையாக எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து மாதவராஜ் என்ற எழுத்தாளரும் அயோத்தி பட கதை தன்னுடையது என தெரிவித்தார். ஆனால் அயோத்தி படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதனால் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அதையும் தாண்டி அயோத்தி படம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதோடு, தொடர் தோல்விகளை பெற்று வந்த நடிகர் சசிகுமாருக்கும் கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. இந்த படம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே 1 ஆம் தேதி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. அதேசமயம் கடந்த ஏப்ரல் முதல் வாரம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இதனிடையே அயோத்தி படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. 

இதில் கலந்து கொண்ட நடிகர் சசிகுமார்,  அயோத்தி படத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் விரைவாக ரிலீஸ் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால் சரியாக புரொமோஷன் செய்ய முடியவில்லை. இதனால் படம் வந்ததே மக்களுக்கு தெரியவில்லை. அடுத்த சில நாட்களுக்குப் பிறகே பிக்கப் ஆனது என கூறினார். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஷீல்டு வாங்குகிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. 

அதேசமயம் எனக்கு ஒரு சின்ன வருத்தம் இருக்கிறது. மகேந்திரன், பாலுமகேந்திரா இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த படத்தைப் போட்டு காட்டியிருப்பேன். ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து பேசியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. சிம்பு வாழ்த்தும் தெரிவித்தார். அவர் தான் சுப்பிரமணியபுரம் படத்தை எடுக்க முடிவு செய்த போது பேசப்பட்ட நடிகர். அவர்களுக்கு என் நன்றி. என் கேரியரில் அயோத்தி படம் மிக முக்கியமான படமாகும். 

இந்த படத்தின் வெற்றியை மக்கள் தங்களின் வெற்றியாக எடுத்துக் கொண்டார்கள். மேலும் இதன்மூலம் அடுத்தடுத்த படங்களும் நான் நல்ல படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் தெரியப்படுத்தி உள்ளீர்கள். இனி இதுபோன்ற நல்ல படங்களைத் தருவேன் எனவும் அந்நிகழ்ச்சியில் சசிகுமார் கூறியுள்ளார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படப்பிடிப்பு துவக்கம்
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படப்பிடிப்பு துவக்கம்
இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
விட்டா கருப்பனுக்கு சீட் ஒதுக்க சொல்லுவாங்க போல...சங்கி கும்பலை மிஞ்சிய கருப்பு படக்குழு
விட்டா கருப்பனுக்கு சீட் ஒதுக்க சொல்லுவாங்க போல...சங்கி கும்பலை மிஞ்சிய கருப்பு படக்குழு
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Twisha Sharma : MISS புனே திடீர் மரணம்! சிக்கிய EX.நீதிபதி குடும்பம்..வரதட்சணை கொடுமை?
Tasmac Issue | ’’பாட்டிலுக்கு 10 ரூபாய்!’’TASMAC ஊழியர்கள் STRIKE..மயிலாடுதுறையில் பரபரப்பு
Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”
பினராயி கோட்டையை வீழ்த்தியகாங்கிரஸின் பிரம்மாஸ்திரம் !யார் இந்த வி.டி.சதீசன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
CV Shanmugam : தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Vijay: தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
Annamalai : ’அவர் மீண்டும் வரனும் – பாஜகவில் எழத் தொடங்கியது கலக குரல்’ தலைவராகிறாரா அண்ணாமலை..?
’அண்ணாமலைக்கு ஆதரவாக எழும் குரல்கள்’ மீண்டும் பாஜக தலைவர் ?
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
Embed widget