கையை அறுத்து மிரட்டிதான் எங்கள் திருமணம் நடந்தது...மனைவி குறித்து ரவி மோகன்
ஆர்த்தி ரவி தனது கையை அறுத்து மிரட்டி தான் என்னை திருமணம் செய்துகொண்டார் என நடிகர் ரவி மோகன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

இந்த குடும்பம் வேண்டாம் என்று என்னுடைய பெற்றோர்கள் என் காலில் விழுந்து கெஞ்சினார்கள். அவர்கள் எவ்வளவு சொல்லியும் நான் கேட்கல. திருமணம் நடைபெற்ற முதல் நாளில் இருந்து நிறைய அநியாயங்கள் கடந்திருக்கிறது. ஆர்த்தி தனது கையை அறுத்துக்கொண்டு மிரட்டிதான் என்னை இந்த திருமணம் செய்துகொள்ள வைத்தார் . இது பிளாக் மெயில் மேரேஜ் தான் . வெளியே வந்த கடந்த ரெண்டு வருடமாக தான் நாம் நிம்மதியாக இருக்கிறேன். என் உடன் இருந்த அனைவருக்கும் இது தெரியும்
திருமணம் நடந்த இரண்டு ஆண்டுகளில் என் வீட்டை விட்டு பிரித்து என்னை கூட்டி வந்தார்கள். இங்க வந்து இங்க வேலைக்கு போ அங்க வேலைக்கு போ , யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்கோ என்று சொன்னார். அப்படி தான் எனக்கு மூன்று படங்கள் தோல்வியடைந்தது . அதன் பின் அவர்கள் சொந்த தயாரிப்பில் நடிக்க வைத்தார்கள். ஒரு படம் முடிவதற்குள் அடுத்த படத்திற்கான டேட் முடிவு செய்து என்னை வேளியே நடிக்கவிடாமல் கம்பேனி ஆர்டிஸ்டாக வைத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு பிடிக்கிற மாதிரி மாஸா கமர்சியலாக எல்லா படங்களிலும் நான் நடிக்கனும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















