உன் நடிப்பு பிடிக்காது என்ற பாரதிராஜா...அஞ்சலி செலுத்தி ரஜினி பகிர்ந்த தகவல்
தனது மனதில் பட்டதை எந்த வித ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக பேசக்கூடியவர் பாரதிராஜா என நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்

பாரதிராஜா உயிருடன் இருந்தபோதே அவரை சந்திக்க பலமுறை முயற்சி செய்ததாகவும் ஆனால் அவர் குணமைந்து வந்துவிடுவார் அப்போது அவரை பார்க்க வரும்படி சொல்லிவிட்டார்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று தனது 84 வயதில் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது உடன் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா அவரிடன் திரைப்பணியை கெளரவிக்கும் விதமாக அவரது இறுதி ஊர்வலத்தை முழு அரசு மரியாதையுடன் நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் அனைத்து பிரபலங்களும் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பாரதிராஜா குறித்து சிவ நிமிடங்கள் பேசினார்.
உன் நடிப்பு பிரிக்காது என்ற பாரதிராஜா
"என்னுடைய 50 ஆண்டுகால நண்பர். அவருடைய திறமைகளைப் பற்றியும் அவருடைய சாதனைகளைப் பற்றியும் எல்லாருக்குமே தெரியும். அதுமட்டுமில்லாமல் திரையுலகில் புதிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்களை அறிமுகப்படுத்தியவர். அவரை வாழ வைத்த சினிமாத் துறையை வாழவைத்தவர். இயக்குநர்கள் முதல் நடிகர்கள் வரை யாருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அவர்களுக்காக முதலில் ஓடி வருபவர் பாரதிராஜா அவர்கள். அவர்கள் படைப்புகள் என்றென்றும் மக்களுடைய மனதில் நீடிக்கும். தனிப்பட்ட முறையில் அவர் ஒரு குழந்தை மாதிரி . மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுபவர். என்னைப் பற்றி நிறைய விமர்சனங்களை வைத்திருக்கிறார். உன்னை எனக்கு பிடிக்கும் ஆனால் உன் நடிப்பு எனக்கு பிடிக்காது என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். அவ்வளவு வெளிப்படையாக வேறு யாரும் பேச மாட்டார்கள். அதனால் தான் கலைஞர் கருணாநிதி , எம்.ஜி,ஆர் , சிவாஜி ஆகிய அனைவரும் அவருடன் நல்ல நட்பு கொண்டிருந்தார்கள். யாருடைய வீட்டிலும் அவர்களின் பெட்ரூம் வரை எந்த நேரத்திலும் நேரடியாக செல்லக் கூடிய ஆளாக அவர் இருந்தார். அவர் உயிரோடிருக்கும் போதே அவருடைய பார்க்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் குணமடைந்த பின் வந்து பார்க்க சொன்னார்கள். கடைசியில் அவர் உயிருடன் இருக்கும் போது பார்க்க முடியாமலே போய்விட்டது. எப்போதும் அவர் என்னுடன் இருப்பார். அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என பாரதிராஜா குறித்து ரஜினி பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















