மேலும் அறிய

அவ்வை சண்முகி ஷூட்டிங்.. நடிகர் கார்த்திக் நட்பு.. மணிவண்ணன் சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்!

மறைந்த இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் தன்னுடைய திரை அனுபவங்களைப் பேசியுள்ள காணொளி ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மறைந்த இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் தன்னுடைய திரை அனுபவங்களைப் பேசியுள்ள காணொளி ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் அவர் நடிகர் கமல்ஹாசனுடன் `அவ்வை சண்முகி’ படத்தில் நடித்த அனுபவங்கள், நடிகர் கார்த்திக் உடனான அனுபவங்கள் ஆகியவை குறித்து பேசியுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் `கமலைப் போல ஒரு dedicated actorரை நான் பார்த்தது இல்லை. அதிகாலை 3 மணிக்கு எழுந்துவிடுவார். ரப்பர் மாஸ்க் போட்டு, அது காயும் வரை ஸ்ட்ரா மூலமாக எதையாவது குடிப்பார்.. வாயை அசைத்தால் அவரது மேக்கப் உடைந்துவிடும்.. அதனால் அசைக்காமலே இருப்பார். 11 மணிக்கு அந்த மேக்கப் உடைய தொடங்கும். அதனால் அதற்குள் அனைத்து காட்சிகளையும் படமாக்க வேண்டும்.. நாங்களும் அவருக்கு ஒத்துழைக்கும் விதமாக நடித்துக் கொடுப்போம்.. அதையும் புரிந்துகொள்வார். எங்கள் பிரச்னை என்பது பெரிதே இல்லை. நாங்கள் நடித்தால் மட்டும் போதும். ஆனால் அவர் மேக்கப் அணிந்திருக்கிறார். அதைக் கவனிக்க வேண்டும். பெண் வேடம் போட்டிருக்கிறார். அந்த சிகையலங்காரத்தைக் கண்காணிக்க வேண்டும். அதோடு சேர்ந்து நடிக்க வேண்டும். நடிக்கும் போதும் சும்மா இருக்க முடியாது.. தன்னோடு நடிப்பவரையும் கவனிக்க வேண்டும்.. அதையும் செய்வார்.. இத்தனை வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடியவர் கமல் ஹாசன்’ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் `அவரைக் காதலிக்கக்கூடிய வேடம் என்பது என் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல். இப்பவும் நிறைய ஊர்களுக்குப் பயணிக்கும் போது, `முதலியாரே’ என்பார்கள்.. அந்தப் பெயர் கிடைத்ததும் `அவ்வை சண்முகி’ படத்தின் மூலமாகத் தான். அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ் கண்ணா ஆகியோர் தான். ரமேஷ் கண்ணா அந்தப் படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். வழக்கமான சென்னை தமிழாக இல்லாமல், சென்னையில் வாழும் முதலியார்கள் பேசும் வட்டார வழக்கை எனக்கு அவர் கற்றுத் தந்தார். ரவிகுமார், ரமேஷ் கண்ணா, கமல் சார் ஆகிய மூவரும் தான் என்னை `அவ்வை சண்முகி’ படத்திற்காக தயார் செய்தனர். அந்தப் படம் இன்று மட்டுமல்ல, என்னால் எப்போதும் மறக்க முடியாத படம்.. இதற்காக அந்த மூவரிடமும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அவ்வை சண்முகி ஷூட்டிங்.. நடிகர் கார்த்திக் நட்பு.. மணிவண்ணன் சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்!

நடிகர் கார்த்திக் உடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்த மணிவண்ணன், `நடிகர் கார்த்திக்கோடு இணைந்து திரைப்பட இயக்கத்தில் ஈடுபட்டது குறைவு.. ஆனால் பல திரைப்படங்கள் அவரோடு நடித்திருக்கிறேன். அவரது முதல் படமான `அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் இருந்தே கார்த்திக் எனக்கு நன்கு பரிச்சயம். அவர் ஒரு மாதிரி ஜாலியான மனிதர். அகத்தியன் சார் படங்களில் காட்சியையும், அதன் அமைப்பையும் அவர் எங்களிடம் சொல்லி, ’நீங்கள் பேசிக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிடுவார். நாங்கள் இருவரும் பேசி பேசி காட்சியை உருவாக்கி விடுவோம்.. அகத்தியன் சார் ஷாட்களைப் பிரிப்பது, க்ரெக்‌ஷன் சொல்வது முதலானவற்றை மேற்கொள்வார். இருவரும் சேர்ந்து பணியாற்றுவது அவ்வளவு நன்றாக இருக்கும். `கோகுலத்தில் சீதை’ போன்ற திரைப்படங்கள் இருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒன்று’ என்று கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
"இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி" பரபரப்பை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
"இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி" பரபரப்பை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
TN Rain Alert:ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
பெற்றோர்களே உஷார்: உதவித்தொகை அளிப்பதாக மோசடி செய்யும் கும்பல்- பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
பெற்றோர்களே உஷார்: உதவித்தொகை அளிப்பதாக மோசடி செய்யும் கும்பல்- பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
Embed widget