மேலும் அறிய

"ஐஸ்வர்யா ராய் கிடைத்தது என் குடும்பத்திற்கே அதிர்ஷ்டம்” - காரணங்களை அடுக்கிய அபிஷேக் பச்சன்!

"நடிகர்கள் மிக மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோம். சில சமயங்களில் நாங்கள் கோபமாக திட்டுவோம், நாங்கள் அதிகமாக கோபம் கொண்டு வெடிக்கிறோம்… ஆனால், ஒருநாளும் அவர் அப்படிச் செய்து நான் பார்த்ததில்லை"

ஐஸ்வர்யா ராய் தன் வாழ்வில் வந்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று கூறி நெகிழ்ந்திருக்கிறார் அபிஷேக் பச்சன். பெண்கள் ஆண்களை விட உயர்வானவர்கள் என்று கூறிய அவர், ஐஸ்வர்யா அவருடைய வாழ்வில் நேர்ந்த கடினமான நேரங்களை எல்லாம் மிக சாமர்த்தியமாக கடந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

1994ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் நடிகையானார். அதன் பிறகு பாலிவுட்டில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றார். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்தனர். கர்ப்பம், குழந்தை என்றான பிறகு ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்தார். அதன் பிறகு அவர் மீண்டும் நடிக்கத் துவங்கினாலும் அவருக்கு இதுவரை பெரிய ஹிட் ஒன்றும் கிடைக்கவில்லை. இடையில் மணிரத்னத்திற்காக ராவணன் படத்தில் களமிறங்கியும் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை என்பதில் ஏமாற்றம் அடைந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhishek Bachchan (@bachchan)

இந்நிலையில் ஒரு பேட்டியில் அபிஷேக் பச்சனிடம் ஐஸ்வர்யாவின் தாக்கம் உங்களுக்குள் இருக்கிறதா என்று கேட்டபோது, "நிச்சயமாக, ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களே உயர்ந்த இனம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர்கள் எல்லாவற்றையும் முன்னேற்ற முனைகிறார்கள். அதில் என் மனைவியும் ஒருவர். அவர் எப்போதும் எனக்கு உணர்வுப்பூர்வமாக மிகச்சிறந்த வகையில் ஆதரவாக இருந்துள்ளார். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, எனது முழு குடும்பமும். ஐஸ்வர்யா போன்ற ஒரு வாழ்க்கைத் துணையை கொண்டிருப்பதில் உள்ள அற்புதமான விஷயம் என்னவென்றால், அவருக்கு உலகம் தெரியும். அவர் அனைத்தையும் கடந்து வந்திருக்கிறார். எனவே நீங்கள் வீட்டிற்கு வரும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது, எனது அன்றைய நாள் மிகவும் மோசமாக இருந்தால், அதனை மாற்ற ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்பது மிகப்பெரிய ஆறுதல்" என்று கூறினார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhishek Bachchan (@bachchan)

இம்மாத இறுதியில் ஐஸ்வர்யா ராயுடன் தனது 15வது திருமண நாளை கொண்டாடவிருக்கும் அபிஷேக், கடினமான சூழ்நிலைகளிலும் தன்னை அமைதியாக வைத்திருப்பதற்காக அவரை மேலும் பாராட்டினார். அவர் பேசுகையில், "நான் அவரை பல சமயங்களில் கவனித்துள்ளேன், அவர் தனது வாழ்க்கையின் கடினமான காலங்களை மிகுந்த கண்ணியத்துடனும் கருணையுடனும் சாமர்த்தியமாக கடந்து வந்துள்ளார். நான் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். நடிகர்கள் மெல்லிய உணர்வு கொண்டவர்கள், நாங்கள் மிக மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோம். சில சமயங்களில் நாங்கள் கோபமாக திட்டுவோம், நாங்கள் அதிகமாக கோபம் கொண்டு வெடிக்கிறோம்… ஆனால், ஒருநாளும் அவர் அப்படிச் செய்து நான் பார்த்ததில்லை." என்றார்.

யாமி கெளதம் மற்றும் நிம்ரத் கவுர் உடன் நடித்துள்ள அபிஷேக் பச்சனின் அடுத்த படமான தஸ்வி, நெட்ஃபிக்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகிறது. ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Embed widget