மேலும் அறிய

Kizhakke Pogum Rail: பூவரசம் பூ பூத்து 45 வருஷமாச்சு.. பாஞ்சாலி - பரஞ்சோதியின் காதல்.. இன்றும் தொடரும் கிழக்கே போகும் ரயிலின் பயணம்!

பாசத்துக்குரிய பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' பயணம் இன்றுடன் 45 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

கிராமம் என்றாலே அழகும் அமைதியும் நிறைந்த ஒரு சொர்க்கமாக காட்சியளிக்கும் அதே நேரத்தில், சடங்கும் சம்பிரதாயங்களும் தான் பக்கபலம் என வாழ்ந்தே பழகிய மனிதர்கள் வசிக்கும் இடமும் அதுவே. அந்த அழகிய சுற்றுச்சூழலையும், வெள்ளந்தியான காதலர்களையும் ஒன்றுசேர்த்து அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி ரயிலில் ஏற்றிய பாசத்துக்குரிய பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' பயணம் 45 ஆண்டுகளை கடந்தும் பயணித்து கொண்டு இருக்கிறது. அந்த ரயிலில் பயணம் செய்த திரை ரசிகர்கள் இன்று மட்டுமல்ல இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் அதன் நினைவுகளை மறக்க முடியாது!

 

Kizhakke Pogum Rail: பூவரசம் பூ பூத்து 45 வருஷமாச்சு.. பாஞ்சாலி - பரஞ்சோதியின் காதல்.. இன்றும் தொடரும் கிழக்கே போகும் ரயிலின் பயணம்!

முதலில் மயில் பிறகு ரயில் :

16 வயதினிலே மூலம் மயிலுடன் அறிமுகமான பாரதிராஜா, அடுத்த ஹிட் கொடுக்க ரயிலில் வந்திறங்கினார். அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிப்பில் உருவான இப்படத்தில் பாஞ்சாலியாக அறிமுகமானார் ராதிகா. அவருக்கு ஜோடியாக பரஞ்சோதியாக சுகுமார், இருவரும் வெள்ளந்தியான காதல் ஜோடிகள். இவர்களின் காதலை எப்படி கிழக்கே போகும் ரயில் ஒன்று சேர்த்தது தான் கதையின் கரு! 

பிற்படுத்தப்பட்டவனுக்கு காதல் கூடாதா:

தாயை இழந்த பாஞ்சாலி, தன் அக்காவிடம் தஞ்சமடைய, அக்கா கணவரோ மச்சினிச்சி மீது ஒரு கண்ணாக இருக்கிறான். பிற்படுத்தப்பட்ட நாவிதர் குடும்பத்தைச் சேர்ந்த பரஞ்சோதி வேலை எதிலும் ஈடுபாடு இல்லாமல் கற்பனையும் கவிதையும் கையுமாக அலைகிறான்.

பாஞ்சாலிக்கும் பரஞ்சோதிக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்பட, வாய்க்கால் வரப்பிலும், ஆத்தங்கரை ஓரத்திலும் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பு ஒரு முறை பஞ்சாயத்தில் கொண்டு நிறுத்த, பிற்படுத்தப்பட்டவன் என்ற காரணத்துக்காக கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்பட்டு, மொட்டையடித்து கழுதையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறான் பரஞ்சோதி. 

 

Kizhakke Pogum Rail: பூவரசம் பூ பூத்து 45 வருஷமாச்சு.. பாஞ்சாலி - பரஞ்சோதியின் காதல்.. இன்றும் தொடரும் கிழக்கே போகும் ரயிலின் பயணம்!

மூடநம்பிக்கையில் சிக்கிய பாஞ்சாலி :

ஒன்றாக சேர்ந்து செத்துவிடலாம் என காதலி சொல்லம் இல்லை வாழ்ந்து காட்ட வேண்டும் என வீரப்பாக சென்னை செல்கிறான் காதலன். இவர்களுக்கு தூதாக கிழக்கே போகும் ரயில் கடிதங்களை பரிமாற்றம் செய்கிறது. நம்பிக்கை கொடுத்த காதலன் நிச்சயம் வந்து தன்னை அழைத்துச் செல்வான் என ஆவலுடன் காத்திருந்த பாஞ்சாலியை களவாட பார்க்கும் கணவனிடம் இருந்து காப்பாற்றத் துடிக்கும் அக்காவாக காந்திமதி. ஊரே ஒரே வெள்ளக்காடாக மாற, உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் கன்னிப்பெண் கையில் தீப்பந்தம் வைத்து கொண்டு ஊரை சுற்றி வந்தால் மழை நின்றுவிடும் என மூடநம்பிக்கையில் சிக்குகிறார் பாஞ்சாலி. 

ஒன்று சேர்ந்த காதல் :

பாஞ்சாலியும் தெருவில் ஒட்டுத் துணியின்றி இறங்கி நடக்க, எதுவும் தெரியாத பரஞ்சோதி வந்து பாஞ்சாலியை அழைத்து கொண்டு ஓட, ஊரே அவர்களை துரத்துகிறது. உயிரை கையில் பிடித்து கொண்டு கிழக்கே போகும் ரயிலில் ஏறி தப்பிக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து பார்வையாளர்களும் நிம்மதி பெருமூச்சை விட்டு இருக்கையில் இருந்து எழுகிறார்கள். 

ராதிகாவின் அடையாளம் :

ராதிகாவுக்கு அறிமுகம் கொடுத்த படமே இன்று வரை அவரின் அடையாளமாக உள்ளது. பாரதிராஜா அவரின் சிரிப்பை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துகொண்டார். இளையராஜாவின் இசை படத்திற்கு புத்துயிர் கொடுத்தது. கவுண்டமணியின் 'இங்கே இருக்கறது பச்சைக்கிளி. அங்கே இருக்கறது பாஞ்சாலிக்கிளி' என்ற பஞ்ச் வசனங்கள் கைதட்டல் அள்ளின. 

இசை ராஜாங்கம் செய்த ராஜா :

’மாஞ்சோலைக் கிளிதானோ’, ’கோயில்மணி ஓசை தன்னை கேட்டதாரோ’, ‘பூவரசம் பூ பூத்தாச்சு’ என ஒவ்வொரு பாடலும் ரசிகர்களையும் ரயிலில் பயணம் அழைத்து சென்றது. ராஜாங்கம் செய்ய ராஜாவின் இசை பாடல்கள் அனைத்துமே இன்று வரை பிரபலமான சூப்பர் ஹிட் பாடல்கள். படம் விட்டு வரும் ஒவ்வொருவரின் காதுகளிலும்  "பாஞ்சாலி, பாஞ்சாலி, பரஞ்சோதி பரஞ்சோதி" என்ற கிளியின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
ராயல் என்ஃபீல்டில் அதிவேகம்! காரில் தட்டி விபத்து! இளைஞர்கள் மீது ஏறி இறங்கிய லாரி! செங்கல்பட்டில் பரிதாபம்!
ராயல் என்ஃபீல்டில் அதிவேகம்! காரில் தட்டி விபத்து! இளைஞர்கள் மீது ஏறி இறங்கிய லாரி! செங்கல்பட்டில் பரிதாபம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
ராயல் என்ஃபீல்டில் அதிவேகம்! காரில் தட்டி விபத்து! இளைஞர்கள் மீது ஏறி இறங்கிய லாரி! செங்கல்பட்டில் பரிதாபம்!
ராயல் என்ஃபீல்டில் அதிவேகம்! காரில் தட்டி விபத்து! இளைஞர்கள் மீது ஏறி இறங்கிய லாரி! செங்கல்பட்டில் பரிதாபம்!
Paris 2024 Olympics: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
உதயநிதி பெயரை உபயோகப்படுத்திய திமுக எம்.பிக்கள்! விளாசித்தள்ளிய ஜெயக்குமார்!
உதயநிதி பெயரை உபயோகப்படுத்திய திமுக எம்.பிக்கள்! விளாசித்தள்ளிய ஜெயக்குமார்!
Stock Market: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Jobs: பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget