மேலும் அறிய

Urban local body Election 2022: முந்திய தர்மபுரி; மந்த நிலையில் சென்னை: 3 மணி நிலவரம் இதுதான்!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, முதல் இடத்தில் தர்மபுரியும் கடைசி இடத்தில் சென்னையும் உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, முதல் இடத்தில் தர்மபுரியும் கடைசி இடத்தில் சென்னையும் உள்ளன.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு வாபஸ் பெறுதல், அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் தீவிரப் பிரச்சாரம் என தமிழகம் முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டியது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இதற்காக தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து சாமானிய மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்டங்களிலும் பதிவான வாக்குப் பதிவு சதவீதத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 47.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.


Urban local body Election 2022: முந்திய தர்மபுரி; மந்த நிலையில் சென்னை: 3 மணி நிலவரம் இதுதான்!!

கோவை மாவட்டத்தில் 46.52% வாக்குகளும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 54.15% வாக்குகளும் திருச்சியில் 57.09% வாக்குகளும் பதிவாகின. விழுப்புரத்தில் 60.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மதுரை மாவட்டத்தில் 42.70% வாக்குகளும் பதிவாகின.

புதுக்கோட்டையில் 57.37% வாக்குகளும் மயிலாடுதுறையில் 51.97% வாக்குகளும் பதிவாகின. திருவண்ணாமலையில் 54.81%, ராமநாதபுரத்தில் 52.46%, கன்னியாகுமரியில் 50.44%, பெரம்பலூரில் 55.58% பதிவானது. 

திருவாரூர் மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி 56.2 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டில் 37.99%, சேலத்தில் 56.37%, சிவகங்கையில் 52.95 % வாக்குகள் பதிவாகின. தேனியில் 55.71 % வாக்குகளும், அரியலூரில் 62.34 % வாக்குகளும் பதிவாகின. 

தூத்துக்குடியில் 49.35 % வாக்குகள் பதிவாகின. அதேபோலத் தென்காசியில் 58.05%, கள்ளக்குறிச்சி 61.07% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக  தர்மபுரி மாவட்டத்தில் 65.68 % வாக்குகள் பதிவாகின. 

கரூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரத்தின்படி வாக்கு சதவீதம் 63.56 ஆக உள்ளது. குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் வாக்குப் பதிவு, 31.89 சதவீதம் ஆக உள்ளது. சென்னையில் தொடர்ந்து வாக்குப்பதிவு மந்தமாக இருப்பதால் பொதுமக்கள் அவசியம் வாக்களிக்க வேண்டுமென மாவட்டத் தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TN Bypoll: இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம்? தொகுதிக்கு எத்தனை பேர்?
இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம் என்ன? தொகுதிக்கு எத்தனை பேர்?
"விஜய் படம் ஒட்டாத வீட்டில் ஓட்டு விழாது" - தவெக வேட்பாளர் சத்யபாமா சர்ச்சை பேச்சு
தட்டாஞ்சாவடியில் தேர்தல் களம் சூடுபிடித்தது! இன்று, நாளை வேட்புமனு தாக்கல்... அக்.6-ல் வாக்குப்பதிவு
தட்டாஞ்சாவடியில் தேர்தல் களம் சூடுபிடித்தது! இன்று, நாளை வேட்புமனு தாக்கல்... அக்.6-ல் வாக்குப்பதிவு
தவெகவுக்கு செக் வைத்த கம்யூனிஸ்ட்டுகள்! இடைத்தேர்தலில் தனித்து போட்டி ஏன்? - வெளியான பரபரப்பு பின்னணி!
தவெகவுக்கு செக் வைத்த கம்யூனிஸ்ட்டுகள்! இடைத்தேர்தலில் தனித்து போட்டி ஏன்? - வெளியான பரபரப்பு பின்னணி!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தாராபுரம், மதுராந்தகத்தில் ஓட்டு கேட்கப்போகும் முதலமைச்சர் விஜய் - எப்போது தெரியுமா?
CM Vijay: தாராபுரம், மதுராந்தகத்தில் ஓட்டு கேட்கப்போகும் முதலமைச்சர் விஜய் - எப்போது தெரியுமா?
"அழுக்கேறிய மேட்டுக்குடி மனநிலை.." பிரவீன் சக்கரவர்த்தியை விளாசிய செல்வப்பெருந்தகை! காங்கிரஸில் மீண்டும் மல்லுக்கட்டு
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
EPF New Rule: தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
TVK vs DMK:
TVK vs DMK: "காசுக்கு வர்ற கூட்டத்துக்கும், அன்பால வர்ற கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியலயா?" திமுக-வுக்கு தவெக கேள்வி
Houthi on Mecca Attack: “மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல்; சவுதி செல்றது பொய்“ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முக்கிய அறிக்கை
“மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல்; சவுதி செல்றது பொய்“ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முக்கிய அறிக்கை
குலுங்கப்போகும் மதுரை.. நாளை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு - தூங்காநகரத்திற்கு போக இத்தனை பஸ்ஸா?
குலுங்கப்போகும் மதுரை.. நாளை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு - தூங்காநகரத்திற்கு போக இத்தனை பஸ்ஸா?
Kia PV7 Electric Van: கார் என்ன காரு, இறக்குறோம் EV வேன்.! ஒரே சார்ஜில் 460 கிமீ ரேஞ்சுடன் 11 சீட்டர்.! சம்பவம் செய்த கியா
கார் என்ன காரு, இறக்குறோம் EV வேன்.! ஒரே சார்ஜில் 460 கிமீ ரேஞ்சுடன் 11 சீட்டர்.! சம்பவம் செய்த கியா
Embed widget