மேலும் அறிய

2 முறை வாக்களிக்க முயன்ற நபர் கைது - கோவையில் பரபரப்பு

இடது கை விரலை பார்க்கும் போது, அவர் ஏற்கனவே ஒரு இடத்தில் வாக்களித்து விட்டு இரண்டாவது முறையாக வாக்களிக்க வந்தது தெரியவந்தது.

கோவை நல்லாம்பாளையம் தண்டல் முத்தாரம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு(52). இவர் ஒர்க்சாப் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதி, வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் உள்ள பூத் எண் 145ல் வாக்களிக்க சென்றுள்ளார். அப்போது கையில் மை வைக்கும் ஊழியரிடம் வலது கை ஆள்காட்டி விரலை காண்பித்துள்ளார். அப்போது அங்கிருந்து அதிகாரிகள் இடது கை விரலை பார்க்கும் போது, அவர் ஏற்கனவே ஒரு இடத்தில் வாக்களித்து விட்டு இரண்டாவது முறையாக வாக்களிக்க வந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி லதா மகேஸ்வரி கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு காந்திபுரம் மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ஓட்டு இருப்பதாகவும், காந்திபுரம் பகுதியில் வாக்களித்து விட்டு நல்லாம்பாளையம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து திருநாவுக்கரசின் மீது 171(D)- போலியான பெயரில் வாக்களித்தல் மற்றும் 171 F(2)-  தகாத வாக்கு செலுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஸ்டார்ங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள்


2 முறை வாக்களிக்க முயன்ற நபர் கைது - கோவையில் பரபரப்பு

கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது முதல், மாலை 6 மணி வரை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புற வாக்காளர்கள் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு அதிகரித்து காணப்பட்டது. கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 64.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமிற்கு கொண்டு வரப்பட்டு, சட்டமன்ற வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் இயந்திரங்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்ககப்பட்டு சீல் வைக்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் தமிழக காவல்துறையினரும் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டிராங் ரூம் மற்றும் கல்லூரி வளாகம் என அனைத்தும் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி  கண்காணிக்கப்பட்டு வருகின்றது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் ஆகியோர் சீல் வைக்கும் பணிகளின்போது நேரில் இருந்தனர். பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணியினை பார்வையிட வரவில்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகத்தை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியின் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் பகுதிகளில் இருப்பதற்கும், அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், அதுவரை இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
ரிஷப ராசியில் ராஜ யோகம் தரும் குரு + சுக்கிரன் இணைவு : எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள்..?
ரிஷப ராசியில் ராஜ யோகம் தரும் குரு + சுக்கிரன் இணைவு : எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள்..?
Train Cancel: சென்னை மின்சார ரயில்கள் ரத்து..! பயணிகளே இதை கொஞ்சம் கவனிங்க ..! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் லிஸ்ட்!
சென்னை மின்சார ரயில்கள் ரத்து..! பயணிகளே இதை கொஞ்சம் கவனிங்க ..! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் லிஸ்ட்!
Mullivaikkal Remembrance Day: ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
ரிஷப ராசியில் ராஜ யோகம் தரும் குரு + சுக்கிரன் இணைவு : எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள்..?
ரிஷப ராசியில் ராஜ யோகம் தரும் குரு + சுக்கிரன் இணைவு : எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள்..?
Train Cancel: சென்னை மின்சார ரயில்கள் ரத்து..! பயணிகளே இதை கொஞ்சம் கவனிங்க ..! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் லிஸ்ட்!
சென்னை மின்சார ரயில்கள் ரத்து..! பயணிகளே இதை கொஞ்சம் கவனிங்க ..! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் லிஸ்ட்!
Mullivaikkal Remembrance Day: ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும் நினைவிருக்கிறதா..? முள்ளிவாய்க்கால் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று..!
Watch Video: ஹரியானாவில் பக்தர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்..!
ஹரியானாவில் பக்தர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்..!
Watch Video: அடி, உதை.. நாடாளுமன்றத்தில் உருண்டு புரண்ட எம்.பிக்கள் - மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினர்
Watch Video: அடி, உதை.. நாடாளுமன்றத்தில் உருண்டு புரண்ட எம்.பிக்கள் - மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினர்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Lok Sabha Election: 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
Vegetable Price: தொடர்ந்து உயரும் பீன்ஸ், பட்டானி விலை.. மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்ததா?
தொடர்ந்து உயரும் பீன்ஸ், பட்டானி விலை.. மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்ததா?
Embed widget