TVK Vijay: இரட்டை இலக்கத்தில் தவெக! ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா விஜய்? எக்ஸிட் போல் முடிவுகள்
Tamil Nadu Exit Poll Results 2026: தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி விஜய்யின் தவெக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Exit Poll Results 2026: தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு முன்னணி தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் திமுக-வே ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்துள்ளனர்.
இரட்டை இலக்கத்தில் தவெக:
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தவர் தவெக தலைவர் விஜய். திரையுலக புகழ் மூலமாக தவெக-வைத் தொடங்கிய விஜய் முதல் தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார்? அவர் அரசியல் வாழ்வு எப்படி அமையப்போகிறது? என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் அவர் மீது இருந்து வருகிறது.
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட விஜய் இந்த தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் என்று கணிக்கப்பட்டது. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் அதையே உறுதி செய்துள்ளது. இந்த தேர்தலில் தவெக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் என்று ஒவ்வொரு கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது. இது தவெக-வினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. மற்ற அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
என்டிடிவி - பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் 18 முதல் 24 தொகுதிகளை தமிழ்நாட்டில் கைப்பற்றும், மேட்ரிஸ் தவெக 10 முதல் 12 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், ரி பப்ளிக் - பி மார்க் தவெக 16 முதல் 26 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்ட் 13 முதல் 26 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணித்துள்ளனர். டைம்ஸ் நவ் மற்றும் ஜேவிசி தவெக 8 முதல் 15 இடங்களை கைப்பற்றும் என்று கணித்துள்ளது.
விஜய் கட்சி தொடங்கியபோது விசிக-விற்கு கூட்டணிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். ஆனால், திருமாவளவன் திமுக கூட்டணியில் நீடிப்பதில் உறுதியாக இருந்து தேர்தலை எதிர்கொண்டுள்ளார். பின்னர், காங்கிரசுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.
மிகுந்த எதிர்பார்ப்பு:
இந்த சூழலில், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டுள்ள விஜய் இந்த தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகள் பெறுவார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்தது. அவர் மட்டுமே வெற்றி பெறுவார் என்று தொடக்கத்தில் பலரும் கருத்துக்கள் தெரிவித்த நிலையில், கருத்துக்கணிப்பின் முடிவிலே தவெக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு இருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையே உண்டாக்கியுள்ளது.
விஜய்க்கு பெரும்பாலான முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் வாக்களித்துள்ளனர் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், முதியவர்கள் ஆகியோரின் வாக்குகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் இந்த தேர்தலில் பெறும் வாக்கு சதவீதம் ஆட்சியை அமைக்கப்போவது யார்? என்பதையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக-வை விஜய் எப்படி வழிநடத்துகிறார்? என்பதைப் பொறுத்தே அவரது மற்றும் தவெக-வின் அரசியல் எதிர்காலம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்



















