Tamil Nadu Election Results: ஸ்ரீபெரும்புதூரில் தவெக முன்னிலை! மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட செல்வப் பெருந்தகை!
Sriperumbudur Result: "ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை பின்னடைவை சந்தித்துள்ளார்."

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூரில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் தென்னரசு ஆரம்பம் முதலே முன்னிலை பெற்று மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளார்.
முதல் சுற்றின் அதிகாரப்பூர்வ நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் தென்னரசு 3,743 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பழனி 2,825 வாக்குகளுடனும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செல்வப்பெருந்தகை 2,347 வாக்குகளுடனும் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சிந்து எழிலரசன் 262 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தொலைநோக்கு பார்வையுடனும், மாற்றத்தை விரும்பியும் வாக்களித்த வாக்காளர்களின் ஆதரவு தவெக வேட்பாளருக்குச் சாதகமாகத் திரும்புவதை இந்த முதல் சுற்று முடிவுகள் காட்டுகின்றன. காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதியில், தவெக வேட்பாளர் சுமார் 918 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை விடவும், 1,396 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸை விடவும் முன்னிலை வகிப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த சுற்றுக்களில் இந்த முன்னிலை அதிகரிக்குமா அல்லது மற்ற கட்சிகள் முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வாக்கு நிலவரம் (முதல் சுற்று):
தவெக (தென்னரசு): 3,743 (முன்னிலை)
அதிமுக (பழனி):2,825
காங்கிரஸ் (செல்வப்பெருந்தகை): 2,347
நாம் தமிழர் (சிந்து எழிலரசன்): 262
ட்ரெண்டிங் செய்திகள்



















