MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
2021-ம் தேர்தலில் சேலத்தில் திமுகவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மத்திய பாஜக அரசை போல போல நாங்கள் சேலத்தை புறக்கணிக்காமல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்

கடந்த 2021-ம் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் திமுகவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மத்திய பாஜக அரசை போல போல நாங்கள் சேலத்தை புறக்கணிக்காமல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம் என சேலம் தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்க்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். அந்த வகையில் சேலத்தில் இன்று பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துக்கொண்டனர்.
அந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, சேலம் மலைகளின் மாவட்டம் என்பார்கள். ஆனால் இங்கு மகளிரால் நிரம்பியுள்ளது.மகளிர் எல்லோரும் பயர் ஆக இருக்கிறார்கள். சேலம் என்றால் ஸ்டீல் என்பார்கள். ஸ்டாலின் என்பதற்கும் ஸ்டீல் என்றுதான் அர்த்தம். கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசில் 129 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம், வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம், கருப்பூரில் மினி டைடல் பூங்கா, சேலம், மேட்டூர் ஆத்தூரில் அறிவுசார் மையங்கள், அம்மாபேட்டையில் அரசு புறநகர் மருத்துவமனை, மேட்டூர் எடப்பாடியில் புதிய பேருந்துநிலையம், கருப்பூரில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம், எடப்பாடி சங்ககிரியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது .விடியல் பயணத் திட்டத்தில் மாதம் ரூ.800 முதல் ரூ.900 வரை பெண்கள் மிச்சப்படுத்துகிறார்கள். இது எதிர்பார்த்ததுதான். மிச்சமாகும் பணத்தில் தாங்கள் விரும்பிய உணவை வாங்கி சாப்பிடுவதாக பெண்கள் சொல்லி உள்ளனர். வீட்டில் உள்ள பெண்கள், மற்றவர்களுக்காக தாங்கள் சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் அப்படி இருக்காதீர்கள். நீங்களும் சாப்பிட்டு ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடும் ஸ்ட்ராங்காக இருக்கும்.
பெண்களை மையப்படுத்தியே திமுக அரசு செயல்பட்டு வருகிறது .எங்களை பார்த்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு வரும் போது திமுக சதி செய்வதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். 33 சதவீத இட ஒதுக்கீடு என்று எடப்பாடிக்கு தெரிவதற்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகளில் திமுக செயல்படுத்தியுள்ளது. அதை மேலும் உயர்த்தி,உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளோம். சட்டமன்ற, பாராளுமன்றத்தில் இந்த நிலை கொண்டு வர வலியுறுத்தி வருகிறோம். பாஜக நினைத்தால் எப்போது கொண்டு வந்திருக்கலாம். ஆனால் தேவையில்லாம் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை என்பதை கொண்டு வந்து மகளிர் இட ஒதுக்கீடு நடக்க கூடாது என பாரதிய ஜனதாக் கட்சி தடுக்க நினைக்கிறார்கள். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம்.
தொகுதி வரையறையைத்தான் எதிர்க்கிறோம். தமிழ்நாடே கொதித்து போயுள்ளது. தமிழ்நாட்டில் அனைவரும் கருப்பு கொடி ஏற்றப் போகிறோம். பாஜகவின் அலங்கோல சட்டத்திற்கு கோலங்கள் மூலம் பெண்கள் எதிர்க்கப் போகிறார்கள். இதில் அரசியல் வேறுபாட்டிற்கு இடமில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் ஆபத்து சூழ்ந்துள்ளது . எடப்பாடி பழனிசாமிக்கு காலம் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. எக்குக்கு பெயர் போன மாவட்டத்தில் பிறந்து விட்டு ஏன் இப்படி டெல்லிக்கு முதுகு வளைந்து போய் விட்டார். கேரளா, தெலுங்கானாவில் கட்சி வேறுபாடின்றி எதிர்க்கிறார்கள் . தமிழனாக பிறந்து இப்படி துரோகம் செய்யலாமா உங்கள் துரோகத்திற்கு தண்டனை மே 4 தேதி கிடைக்கும்.
கடந்த 2021-ம் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் திமுகவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மத்திய பாஜக அரசை போல போல நாங்கள் சேலத்தை புறக்கணிக்காமல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். அதனால் 2024-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியை கொடுத்தீர்கள். அதைப் போலவே பெரிய வெற்றியை சட்டமன்றத் தேர்தலிலும் வழங்க வேண்டும என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















