Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026 Voting: முதன்முறையாக வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும்? என்பதை விலாவரியாக கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாண்டிச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள் வசிக்கும் பாண்டிச்சேரியில் நடைபெற உள்ள தேர்தல் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
முதன்முறை வாக்களிக்கச் செல்கிறீர்களா?
இந்த தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை கீழே காணலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்கத் தகுதியானவர்கள். உங்கள் தொகுதிக்கு உட்பட்ட உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கே நீங்கள் வாக்களிக்கச் செல்ல வேண்டும்.
1) வாக்காளர் அட்டை வாக்களிக்கத் தேவையான முதன்மையான ஆவணம். இதை வாக்களிக்க கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். இது இல்லாவிட்டால் கடவுப்புத்தகம் ( பாஸ்போர்ட்), பான் கார்ட், ஆதார் அட்டை, வங்கிப்புத்தகம், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடிக்கு எடுத்துச் செல்லலாம்.
2) நீங்கள் வாக்குச்சாவடிக்குச் சென்றவுடன் முதல் தேர்தல் அலுவலர் உங்கள் அடையாள அட்டையை சரிபார்ப்பார்.
3) அடையாள அட்டை சரிபார்க்கப்பட்ட பிறகு, இரண்டாவது அலுவலர் அழியாத ஊதா நிற மை-யை உங்கள் விரலில் வைப்பார்.
4) பின்னர், வாக்காளர் பதிவேட்டில் வாக்காளராகிய நீங்கள் கையெழுத்திட வேண்டும்.
5) பின்னர், 2வது வாக்குப்பதிவு அலுவலர் உங்களிடம் வாக்காளர் சீட்டை வழங்குவார். அதில் கையெழுத்திடப்பட்டிருக்கும்.
6) இதையடுத்து, 3வது அலுவலர் உங்களிடம் இருந்து கையெழுத்திடப்பட்ட வாக்குச்சீட்டைப் பெற்றுக் கொள்வார். பின்னர், வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பொத்தானை அழுத்துவார்.
7) இப்போது, நீங்கள் வாக்குப்பதிவு இயந்திரம் அருகில் செல்ல வேண்டும். அங்கே நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களோ? அந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
8) வாக்காளர்கள் பெயரை வாசிக்க முடியாதவர்களுக்காக வாக்காளர்கள் பெயர் பக்கத்திலே அவர்களது சின்னம் வரைபடமாக இருக்கும். இதனால், எளிதாக வாக்களிக்க இயலும்.
9) நீங்கள் வாக்களித்த பிறகு அந்த சின்னத்திற்கு நேராக விளக்கு எரியும். இதன்மூலம் நீங்கள் வாக்களித்தது உறுதி செய்யப்படும்.
10) ஒரே சின்னத்தில் 2 முறை வாக்களித்தாலே, வாக்கு இயந்திரத்தில் உள்ள 2 சின்னங்களில் பொத்தானை அழுத்தினாலே வாக்கு செல்லாத ஓட்டாகிவிடும்.
புகைப்படம் எடுக்கத் தடை:
வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் அலுவலர்களுக்கும், வாக்கு இயந்திரத்திற்கும் எந்தவித இடையூறும் செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். மேலும், வாக்களிக்கும்போது செல்ஃபி எடுப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
இந்த முறை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிப்பது யார்? என்பதை தீர்மானிப்பதில் முதல் தலைமுறை வாக்காளர்கள் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.




















