மேலும் அறிய

PM Modi Exclusive Interview: ரூ.2,200 கோடி பறிமுதல் செய்த அமலாக்கத்துறை, மாநிலங்களில் ஊழல் - பிரதமர் மோடி

PM Narendra Modi Exclusive: கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, ஏபிபி செய்தி குழுமத்திற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.

PM Narendra Modi Exclusive: கடந்த 10 ஆண்டுகளில் அரசியல் சார்பின்றி ஊழல்வாதிகள் மீது, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி:

2024 மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவிற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஏபிபி செய்தி குழுமத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அமோக ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு,  தனது நிர்வாக முறை, பாஜக தலைமையிலான கூட்டணி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் பேசினார்.

மேற்குவங்கத்தில் ஊழலால் காணாமல்போன 3000 கோடி ரூபாயும் மீட்கப்படும் எனவும் மோடி உறுதியளித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்:

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேசியபோது, “எந்த அரசியல் கட்சி மற்றும் சித்தாந்தத்தையும் பொருட்படுத்தாமல், முன்பெல்லாம் ஊழல் வழக்குகளில் பெரிய சுறாக்கள் தப்பித்துக்கொள்ள சிறிய மீன்கள் மட்டும் சிக்கின. ஆனால், இப்போதெல்லாம் பெரிய மீன்கள் தப்புவது இல்லை. அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) போன்ற அமைப்புகளின் பணியை பொதுமக்கள் பாராட்ட வேண்டும்” என்று மோடி வலியுறுத்தினார்.

மேலும், “கேமரா முன் மலைபோல் கரன்சி நோட்டுகள் காட்டப்படுகின்றன, அதை எப்படி மறுக்க முடியும்? 2004 முதல் 2014 வரை அமலாக்கத்துறை 34 லட்ச ரூபாயையும், 2014 முதல் 2024 வரை 2,200 கோடி ரூபாயையும் கைப்பற்றியுள்ளது. தனது ஆட்சியில் ஊழல் எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பதை காட்டுகிறது” எனவும் தெரிவித்தார்.

நீதி வழங்குவது அவசியம் - மோடி:

நீதிக்கான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தும் பிரதமர் மோடி, "தற்போது நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தவறாகக் கூற முடியாது. தவறு செய்த பெரும் புள்ளிகள் கூட சிறையில் உள்ளன. எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ, குற்றம் செய்தவர்கள் சிறையில் உள்ளனர்.

பாவங்கள் அதற்கான விளைவுகளை சந்திக்கும். தங்களது கஜானாவை நிரப்ப அரசாங்கத்திடம் பணம் இல்லை. யாராவது வீட்டைக் கொள்ளையடித்தாலும், அரசாங்கமே கொள்ளையடித்தாலும் பரவாயில்லை. மக்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெறுவதையே மனதில் கொள்வார்கள். கொள்ளையடிக்கப்பட்ட பணம் மக்களுக்கே திரும்பக் கிடைக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை” என மோடி வலியுறுத்தினார்.

பல மாநிலங்களில் ஊழல்:

பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக பேசும்போது, “பீகாரில் வேலைக்கு மாற்றாக நிலங்கள் பெறப்பட்டுள்ளன. நிலத்தைத் திருப்பித் தர முடியுமா என்று நான் கேட்டேன். வங்காளத்தில், ஆசிரியர் ஆவதற்கு அதிகாரப்பூர்வ கட்டண அட்டை உள்ளது. எனவே, உண்மையான தகுதி உள்ளவர்கள் பணியை தொடரவும், தகுதியற்ற நபர்கள் பணியில் இருந்து நீக்கப்படவும் சட்டக் குழுவை அமைக்குமாறு எனது கட்சியினரிடம் கூறினேன்.

அரசு 3,000 கோடி ரூபாய் பறிமுதல் செய்து, 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. கேரளாவில், பெரும்பாலும் எல்.டி.எஃப் உறுப்பினர்களால் நடத்தப்படும் கூட்டுறவு வங்கிகளில் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இது நடுத்தர குடும்பத்தினரால் கடினமாக உழைத்து சம்பாதிக்கப்பட பணம், ஆனால் வங்கிகள் தோல்வியடைகின்றன.  எனவே குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டேன்” என மோடி பேசினார்.

மக்களிடம் திரும்ப வழங்கப்படும் - மோடி:

கைப்பற்றப்பட்ட பணத்தை மக்களிடம் திருப்பித் தருவதற்கான அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த மோடி, “ஏற்கனவே ரூ.1,700 கோடியை திருப்பி அளித்துள்ளோம், மக்களின் பணம் அவர்களுக்கே திரும்பச் செல்ல வேண்டும்” என்றார்.

இந்திய தண்டனைச் சட்டத்தை விடுத்து ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும்,  பாரதீய நியாய் சன்ஹிதாவின் உதவியுடன்,  பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் விரைந்து பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் எனவும் மோடி பேசியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget