மேலும் அறிய

PM Modi: பாஜக வெற்றி...தொடங்கியாச்சு ஹோலி..! குஷி மோடில் பிரதமர் மோடி! உற்சாக பேச்சு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் பாஜக தலைமையகத்தில் இருந்தனர். 

2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று  உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஹோலி பண்டிகை மார்ச் 10ஆம் தேதி தொடங்கும் என்று முன்பே கூறியிருந்தோம். அதன்படி, 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொண்டர்களால் இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று, பாஜகவை வெற்றி பெறச் செய்ததற்காக அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள்” என்றார்.

இந்த நாளை ஜனநாயகத்தின் பண்டிகை என்று கூறிய பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் ஹோலி பண்டிகை தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், “கோவாவில் அனைத்து கருத்துக் கணிப்புகளும் தவறாக நிரூபிக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக புதிய வரலாற்றை எழுதியுள்ளது.  2019இல் மத்தியில் நாங்கள் ஆட்சி அமைத்தபோது, ​​2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பெற்ற வெற்றிதான் காரணம் என்று நிபுணர்கள் கூறினார்கள். 2022 தேர்தல் முடிவுகள் 2024 நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் என்று அதே நிபுணர்கள் சொல்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

 

தேர்தலில் பெண்களின் பங்கு குறித்துப் பேசுகையில், “மாநிலங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தல்களில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். அவர்கள் எங்களை ஆசீர்வதித்துள்ளனர். பெண் வாக்காளர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் நாங்கள் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கம் மீண்டும் தன்னைத்தானே நிரூபிப்பதாகத் தெரிகிறது. இதற்கு முன் கடைசியாக 1985ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.அப்போது மொத்தமுள்ள 425ல் 269 இடங்களை காங்கிரஸ் பெற்றது. அப்போது உ.பி.யில் 425 இடங்கள் இருந்தது. 2017 தேர்தலிலும் பாஜக 325 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இந்த நான்கு மாநிலங்களிலும் கடந்த காலங்களில் பாஜக தலைமையிலான அரசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
"இதை மட்டும் பண்ணாதீங்க சிந்தனை திறன் குறையும்" மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அட்வைஸ்!
Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget