Mamata Banerjee: ’’நான் தோற்கலை; பதவி விலகமாட்டேன்’’ அடம்பிடிக்கும் மம்தா-மேற்குவங்கத்தில் பரபரப்பு!
Mamata Banerjee Press Conference: தான் பதவி விலக மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தாக்கப்பட்டதாகவும் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் தோற்கவில்லை என்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
பதவி விலக மாட்டேன்
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், பாஜக பெரும்பான்மைத் தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து பாஜக ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது. இந்த நிலையில் தான் பதவி விலக மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து மம்தா மேலும் பேசியதாவது:
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, பாஜக 195-200 வாக்குகள் பெறும் என்று அவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்கள் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கவில்லை. 5-6 சுற்றுகள் கூட அவர்கள் காத்திருக்கவில்லை.
ஊடகங்களுடனான சந்திப்புக்குப் பிறகு, பாஜகவினர் வாக்குச் சாவடிக்குள் நுழைந்து, மக்களையும், வாக்கு எண்ணும் முகவர்களையும் அடிக்கத் தொடங்கினார்கள். அனைத்து வாக்கு எண்ணும் முகவர்களும் திரும்பப் பெறப்பட்டதை நான் அறிந்தபோது, நான் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தேன், இன்னும் சுமார் 5 சுற்றுகள் மீதமிருந்தன. நாங்கள் 32,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
பெண்களைத் தாக்கிய பாஜக
ஆனால் பாஜகவினர் 200 சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் 200 வெளியாள் குண்டர்களுடன் உள்ளே சென்று, எங்கள் ஆட்களை அடித்தார்கள். பெண்களும் தப்பவில்லை, அவர்கள் அனைத்து படிவங்களையும் பறித்துக்கொண்டார்கள். இதை அறிந்ததும், நான் அங்கு சென்றேன். அவர்கள் என் காரை நிறுத்தினார்கள், ஆனால் நான் வேறு வழியில் சென்றேன்.
நான் உள்ளே நுழைந்தபோது, சிஆர்பிஎஃப் வீரர்கள் என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. நான் ஒரு வேட்பாளர் என்று சொன்னேன். பின்னர், இயல்பு நிலை திரும்பும் வரை வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தேன்.
நான் மாவட்ட தேர்தல் அதிகாரியைப் பார்த்தேன். 15 நாட்களுக்கு முன்பு அவர் யாருக்கோ, 'வாக்குகளை எண்ணும்போது விளையாடுவேன்' என்று செய்தி அனுப்பியிருந்தது எனக்குத் தெரியும்... நான் சில நிமிடங்களில் உள்ளே சென்றேன். அவர்கள் என் வயிற்றிலும், பின்புறத்திலும் உதைத்து, என்னை வலுக்கட்டாயமாகத் தாக்கினார்கள். அந்த நேரத்தில் சிசிடிவி அணைக்கப்பட்டிருந்தது’’
இவ்வாறு மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். முதலமைச்சரே ராஜினாமா செய்ய மறுப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்



















