மேலும் அறிய

'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !

தமிழ்நாட்டில் இந்த ‘சங்கிகளுக்கு’ இடமில்லை, இடமில்லை, இடமில்லை என்பதை திருப்பரங்குன்றத்திலிருந்து தொடங்கி நாம் நிரூபிப்போம். - கனிமொழி பிரச்சாரம்.

முதலமைச்சரை பார்த்து, ‘உங்கள் சகோதரி சங்கியா என்று? டெல்லிக்கு சென்று காங்கிரஸுடன் கூட்டணி பேசினால் சங்கி ஆக முடியாது. ஆனால், பாஜகவின் ஆர்எஸ்எஸ் கருத்துக்களை முன்வைத்து பேசும்போதுதான் ஒருவர் ‘சங்கி’ என்று அழைக்கப்படுவார்: திருப்பரங்குன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பிரச்சாரம்.
 
கனிமொழி பிரச்சாரம்
 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வீரகனூர் ஊராட்சியில், மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், திமுக வேட்பாளருமான கிருத்திகா தங்கபாண்டியனை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பிரசாரம் செய்தார். கூட்டணி இயக்கங்களின் கொடிகளை பார்க்கும்போது, கிருத்திகா தங்கபாண்டியனின் வெற்றி உறுதி செய்யப்பட்டதே என்ற எள்ளளவும் சந்தேகம் இல்லை. கிருத்திகா தங்கபாண்டியன் இந்தத் தொகுதி மக்களுக்கு புதியவர் அல்ல; தொடர்ந்து இந்தப் பகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டக்கூடிய வேட்பாளரையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார்.
 
சுயமரியாதைக்கு முக்கியத்துவம் தருகிறோம்
 
அதே நேரத்தில், தன் காலில் சுயமாக நிற்கக்கூடியவும், தலைநிமிர்ந்து வாழக்கூடியவும் ஒரு பெண் வேட்பாளர். பல சுயஉதவி குழுக்களை உருவாக்கி, பெண்களின் வாழ்க்கையில் வளம் ஏற்படுத்தப் பாடுபட்டு வரும் ஒருவர் தான் கிருத்திகா தங்கபாண்டியன். அவருக்கு உங்கள் வாக்குகளை உதய சூரியன் சின்னத்தில் அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். திருப்பரங்குன்றம் என்றாலே, சில காலத்திற்கு முன்னால் பாஜக, அதிமுக ஆகியவை இங்கு உருவாக்க முயன்ற கலவரத்தை நாம் மறந்து விட முடியாது. காலங்காலமாக ஒற்றுமையாக, சகோதர சகோதரிகளாக, ஒரே குடும்பமாக வாழ்ந்து வரும் மக்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அனைவருக்கும் மத நம்பிக்கை இருக்கிறது. ஆனால், மதத்தின் பெயரில் வெறுப்பும் காழ்ப்புணர்வும் எந்தக் காலத்திலும் இல்லாமல், வளர்ச்சியே தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு முக்கியமாக உள்ளது. எங்கள் வீட்டு பிள்ளைகள் படிக்க வேண்டும்; அவர்களின் எதிர்காலம் நல்லதாக இருக்க வேண்டும். நாங்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். பெண் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறோம்; நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறோம்; சுயமரியாதைக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் மாநிலம் தமிழ்நாடு.
 
மிகப்பெரிய பாடம்
 
ஆனால், பாஜக இந்த நாட்டின் பல பகுதிகளில் மதக் கலவரங்களை உருவாக்கி, அதன் வழியாக ஆட்சிக்கு வரலாம் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கக்கூடியவர்கள். அவர்கள் திருப்பரங்குன்றத்திலும் அதே விளையாட்டை விளையாடிப் பார்க்கலாம் என நினைத்தார்கள். ஆனால் இங்கு உள்ள மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டினர்,  ‘இது தமிழ்நாடு; உங்கள் கனவுகளுக்கு இங்கு இடமில்லை’ என்று. நாங்க ஒற்றுமையாகத் தமிழர்களாக வாழக்கூடியவர்கள் என்று சரியான பாடத்தை சொல்லித் தந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இந்தத் தேர்தலில் மிகப்பெரிய ஒரு பாடத்தை அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் சொல்லித்தர காத்திருக்கக்கூடியவர்கள் தான் நம்முடைய தமிழ்நாட்டு மக்கள். 
 
யார் சங்கி
 
எதிர் அணியில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டு இருக்கார். என்ன பாத்து சங்கின்னு சொல்றீங்களே, எப்படி நீங்க என்ன போய்ச் சங்கி ன்னு சொல்ல முடியும்? நீங்கக் கூடப் பிஜேபி யோட கூட்டணி வச்சிருந்தீங்க. அதனால் நான் மட்டும் எப்படி அந்த குற்றத்திற்கு ஆளாவேன் என்று கேட்கிறார். ஆனால், எதிரணியில் உள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். ‘என்னை பார்த்து “சங்கி” என்று சொல்கிறீர்கள்; எப்படி என்னை அப்படி சொல்ல முடியும்? நீங்கள் கூட பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தீர்கள். அதனால் நான் மட்டும் எப்படி அந்த குற்றத்திற்கு ஆளாவேன் என்று கேட்கிறார்.  
 
CAA’ கொண்டு வந்தபோது எடப்பாடி பழனிசாமி
 
நான் ஒன்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் முன்னர் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது; தலைவர் கலைஞர் அவர்கள் வாஜ்பாய் அவர்களுடன் இணைந்து செயல்பட்டனர். ஆனால், ‘குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டம்’ (Common Minimum Programme) என்ற ஒன்றை உருவாக்கி, இஸ்லாமிய மக்களுக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று திட்டவட்டமாக நிபந்தனை விதித்தனர். அந்தக் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்து, அதையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டனர். அது பாஜகவின் தனிப்பட்ட தேர்தல் அறிக்கை அல்ல; கூட்டணியின் ஒருங்கிணைந்த தேர்தல் அறிக்கையாக வெளியே வந்தது. அந்தத் தேர்தல் அறிக்கையில் காஷ்மீருக்கு இருந்த தனி அந்தஸ்து பறிக்கப்படும் என்று சொல்லப்படவில்லை. ‘Uniform Civil Code’ (ஒரே குடிமைச் சட்டம்) நிறைவேற்றுவோம் என்று கூறக் கூடாது என்பதில் வலியுறுத்தி அதைத் தடுத்து நிறுத்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள். இவ்வாறு, இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த நடவடிக்கையும் அனுமதிக்காமல் கூட்டணியை நடத்தி, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள். ஆனால் இன்று, ‘CAA’ கொண்டு வந்தபோது எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்? அதை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா? பேசவில்லை.
 
சங்கிகளுக்கு’ இடமில்லை
 
பாஜக எதைச் சொல்கிறோதோ, எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் சொல்லுவதற்கு முன்பே தலையாட்டுகிறீர்கள். அதனால், நீங்கள் முழுமையாக ‘சங்கி’யாக மாறிவிட்டீர்கள். தேர்தல் முடிந்தவுடன் தயாராக இருங்கள், நிச்சயமாக உங்களை ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக அனுப்புவார்கள். ஏனெனில், பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளின் நிலை என்ன ஆனது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்தக் கட்சிகள் எங்கே சென்றன, அந்தத் தலைவர்களின் நிலை என்ன ஆனது என்பதையும் நாம் அறிவோம். அதனால், உங்களுக்கு ஒரு மாநிலத்தில் ஆளுநர் பணி காத்து கொண்டிருக்கிறது. அதோடு, இன்னொரு கேள்வியையும் அவர் எழுப்புகிறார் — முதலமைச்சரை பார்த்து, ‘உங்கள் சகோதரியை காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு அனுப்புகிறீர்களே; அவர்கள் சங்கி ஆகிறார்களா?’ என்று. டெல்லிக்கு சென்றாலே யாரும் சங்கி ஆகிவிட மாட்டார்கள். டெல்லிக்கு சென்று காங்கிரஸுடன் கூட்டணி பேசினால் சங்கி ஆக முடியாது. ஆனால், பாஜகவின் ஆர்எஸ்எஸ் கருத்துக்களை முன்வைத்து பேசும்போதுதான் ஒருவர் ‘சங்கி’ என்று அழைக்கப்படுவார். அதனால், இப்போது வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால் எடப்பாடி பழனிசாமி, ‘இனிமேல் எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இருக்காது’ என்று கூறினார். ஆனால் தேர்தல் வந்தவுடன் மீண்டும் கூட்டணி வைத்து, அவர்களுடன் கைகோர்த்து மேடையில் நிற்கும்போது தான் உங்கள் ‘சங்கித்தனம்’ முழுமையாக வெளிப்படுகிறது. அதனால், தமிழ்நாட்டில் இந்த ‘சங்கிகளுக்கு’ இடமில்லை, இடமில்லை, இடமில்லை என்பதை திருப்பரங்குன்றத்திலிருந்து தொடங்கி நாம் நிரூபிப்போம்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
திருச்சி கிழக்கு: கே.என். நேரு தலைமையில் இனிகோ இருதயராஜை ஆதரித்து மாபெரும் கூட்டணி எழுச்சி! வெற்றிக்கு வியூகங்கள் தீட்டினார்களா?
திருச்சி கிழக்கு: கே.என். நேரு தலைமையில் இனிகோ இருதயராஜை ஆதரித்து மாபெரும் கூட்டணி எழுச்சி! வெற்றிக்கு வியூகங்கள் தீட்டினார்களா?
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget