மேலும் அறிய

திருப்பத்துார் மாவட்டத்தில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்பது இலக்கு - மாவட்ட ஆட்சியர்

திருப்பத்துார் மாவட்டத்தில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்பது இலக்காக உள்ளது - மாவட்ட‌ ஆட்சியர் பேட்டி

திருப்பத்துார் மாவட்டத்தில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்பது இலக்காக உள்ளது என மாவட்ட‌ ஆட்சியர் தர்ப்பகராஜ் கூறியுள்ளார்.
 
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாவது தளத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளான திருப்பத்துார், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய தொகுதிகளுக்கு நாடாளுமன்ற  தேர்தலை முன்னிட்டு ஓட்டு சாவடி மையங்களுக்கு மின்னணு ஓட்டு இயந்திரம் அனுப்பு வைக்கப்பட்டுள்ளது.
 
ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களும் அந்தந்த ஓட்டு சாவடிக்கு சென்று விட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 1042 ஓட்டு சாவடிகளில் 4,305 ஓட்டு சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். அதுதவிர கூடுதலாக 859 ஓட்டு சாவடி அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 
 
திருப்பத்துார் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட பதற்றமான 106 ஓட்டு சாவடிகளில் துணை ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
மேலும் 1042 ஓட்டு சாவடிகளில் 65 சதவீத ஓட்டு சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
அனைத்து ஓட்டு சாவடிகளிலும், மாற்றுத்திறனாளிகளை கையாளுவதற்காக தன்னார்வலர்கள் அமர்த்தப்பட்டுள்ளன. குடிநீர் வசதி, மின்சார வசதி என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
தேர்தல் குறித்து தொடர்ந்து விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. திருப்பத்துார் மாவட்டத்தில் 100 சதவீதம் ஓட்டு பதிவு என்பது இலக்காக உள்ளது.வாக்காளர்கள் தவறாமல் தங்களது ஓட்டை பதிவு செய்ய வேண்டும். 
 
திருப்பத்துார் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.ஒரு கோடியே 53 லட்சத்து 64 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
 
எஸ்பி ஆல்பர்ட் ஜான் கூறுகையில், “திருப்பத்துார் மாவட்டம் பொருத்தவரை தமிழக போலீஸ், ஆந்திர போலீஸ், துணை ராணுவம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும்
அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
 
திருப்பத்துார் மாவட்டத்தில் 16 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாவட்ட , மாநில எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
மேலும் தகராறு செய்யும் நபர்கள், ஏற்கனவே தேர்தல் தொடர்பாக வந்த புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாணவர்களே ரெடியா!
மாணவர்களே ரெடியா! "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயற்சி.. வந்தது அப்டேட்!
Airtel AI: ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
"விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வணங்குவது போன்றது" உருக்கமாக பேசிய மத்திய அமைச்சர்!
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin on Marina Airshow : ’’இவ்ளோ மக்கள் வருவாங்கனு எதிர்பார்க்கல’’முதல்வர் பரபரKanimozhi on Marina Air show : மெரினா உயிரிழப்பு கனிமொழி பகீர் REACTION!யாரை சாடுகிறார்?Air show in Marina : பறிபோன 5 உயிர்கள்! யார் பொறுப்பு?அரசா? விமானப்படையா?Rahul Gandhi : தலித் வீட்டில் சமையல்!Cooking-ல் அசத்திய ராகுல்!நெகிழ வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவர்களே ரெடியா!
மாணவர்களே ரெடியா! "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயற்சி.. வந்தது அப்டேட்!
Airtel AI: ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
"விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வணங்குவது போன்றது" உருக்கமாக பேசிய மத்திய அமைச்சர்!
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
PM Modi Song: பிரதமர் மோடி எழுதிய பாடல்: அடடே.! அற்புதமா இருக்கே.!
பிரதமர் மோடி எழுதிய பாடல்: அடடே.! அற்புதமா இருக்கே.!
எமனாக வந்த அரசு பேருந்து.. தாயும் மகனும் பரிதாப பலி.. கதறும் கிராம மக்கள்
எமனாக வந்த அரசு பேருந்து.. தாயும் மகனும் பரிதாப பலி.. கதறும் கிராம மக்கள்
கைரேகை வைத்து மேவாட் கொள்ளையனை தூக்கிய போலீஸ்.. தீரன் படம் பாணியில் நடந்த சம்பவம்
கைரேகை வைத்து மேவாட் கொள்ளையனை தூக்கிய போலீஸ்.. தீரன் படம் பாணியில் நடந்த சம்பவம்
வெளிநாட்டு நச்சு மரங்களின் தாக்கம்: உணவுச்சங்கிலி இல்லாமல் அழிந்து வரும் மலபார் அணில் வகைகள்!
வெளிநாட்டு நச்சு மரங்களின் தாக்கம்: உணவுச்சங்கிலி இல்லாமல் அழிந்து வரும் மலபார் அணில் வகைகள்!
Embed widget