மேலும் அறிய

Local body election | ஸ்ரீபெரும்புதூரில் பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி ஓட்டு கேட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது

முன்னாள் வார்டு கவுன்சிலரின் கணவரும், தற்போதைய 1வது வார்டு சுயேச்சை வேட்பாளரின் கணவருமான காங்கிரஸ் பிரமுகர் தன் மனைவிக்காக கத்தியை காண்பித்து மிரட்டி ஒட்டு கேட்டதால் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (42). இவர் காங்கிரஸ் கட்சியில் ஸ்ரீ பெரும்புதூர் நகர பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினர் அணியில் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் குடியிருக்கும் ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி 1வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டில் தனக்கு பதிலாக ஏற்கனவே வார்டு கவுன்சிலராக இருந்த தன்னுடைய மனைவி தனலட்சுமியை சுயேச்சை வேட்பாளராக களமிறக்கியுள்ளார்.

Local body election | ஸ்ரீபெரும்புதூரில் பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி ஓட்டு கேட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது
 
இந்நிலையில் இவருக்கும் திமுக வேட்பாளரான லில்லி மாணிக்கத்துக்கும் கடும் போட்டி நிலவிவந்த நிலையில், ஸ்ரீ பெரும்புதூர் காவல் நிலையத்தில் உள்ள தனிப்படையினர், ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது பூபாலன் தன் மனைவிக்காக ராமாபுரம் பகுதியில் பொதுமக்களை பட்டா கத்தியை காட்டி மிரட்டி ஒட்டு கேட்டதை, பார்த்த  காவல்துறையினர் பூபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
மேலும் முன்னாள் வார்டுகவுன்சிலர், தற்போதைய சுயேட்சை வேட்பாளரின் கணவர் பூபாலன் கைது செய்யப்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்  ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டில் திமுக வேட்பாளருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வார்டில் திமுக எளிதாக வெற்றி பெறும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கூட்டணிக் கட்சிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது மட்டுமில்லாமல் பொதுமக்களை பட்டாக்கத்தி காட்டி மிரட்டிய சம்பவத்தில் காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Local body election | ஸ்ரீபெரும்புதூரில் பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி ஓட்டு கேட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது
 
குறிப்பாக ஸ்ரீ பெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு தொழிற்சாலைகள் இருப்பதால், மறைமுக வருவாய்களை பெருக்க அதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் பிரமுகர்கள் இடையே தேர்தலில் வெற்றிபெற போட்டா போட்டி நிலவி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் முன்னாள் மற்றும் இந்நாள் ரவுடிகள் பலரும் தங்களுடைய ஆதரவாளர்களை தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் நகர் போன்ற தேர்தல் பதற்றத்துடன் நடைபெற்று வருகிறது. பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றும் போது இன்னும் பதற்றம் அதிகரிக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget