மேலும் அறிய

உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள்...!

’’திண்டிவனம், ஆரோவில் பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன சோதனைகளில் உள்ளாட்சித் தேர்தலுக்காக கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் எரிசாராய கேன்கள் சிக்கின’’

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முருக்கேரியில் போலீசார் தேர்தல் காரணமாக வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது அந்த வழியே சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு ஈச்சர் வேனை நிறுத்தி சோதனை செய்தனர், அப்போது அதில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அறையில் 60 கேன்களில் தலா 35 லிட்டர் எரிசாராயம் இருப்பதை கண்டுபிடித்தனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் அந்த வேனில் இருந்த ஒருவர் கீழே குதித்து தப்பி ஓடிய நிலையில் மற்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை போலீசார் விசாரணை செய்த போது அவர் விக்கிரவாண்டி அடுத்த குமளம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரது மகன் சதீஷ் (27) என்பது தெரிய வந்தது.  இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா திண்டிவனம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள எரிசாராய கேன்களையும், அதனைக்  கடத்தி வர பயன்படுத்தப்பட்ட ஈச்சர் வாகனத்தையும் பார்வையிட்டு குற்றவாளியிடம் விசாரணை நடத்தினார். இந்த எரிசாராயம் ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கடத்தி வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள்...!

ஆரோவில் வாகன சோதனையில் 6500 மதுபாட்டில்கள் பறிமுதல்:

இதேபோல ஆரோவில் அடுத்த பட்டனூர் அருகே சிறப்பு புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த டாட்டா ஏசி லோடு கேரியர் வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர் சோதனையில் 132 அட்டைபெட்டியில் ரூபாய் 3.5 லட்சம்   மதிப்புள்ள 6,500 மதுபாட்டில்கள் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் விசாரணையில் சென்னையை சேர்ந்த சரவணன் (240 என்பதும் இவர் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்ல படுகிறது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள்...!

சாக்கு மூட்டையில் மது பாட்டில்கள் :

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தனி தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆட்சிப்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சாக்கு மூட்டையுடன் நின்றிருந்த ஒருவரை பறக்கும் படை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரிக்க முயற்சித்தனர். அதற்குள் அந்தநபர் சாக்கு மூட்டையை அங்கு போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த சாக்கு மூட்டையை ஆய்வு செய்தபோது, அதில் 32 மது பாட்டில்கள் இருந்தது. விசாரணையில் தப்பி ஓடியவர், ஆட்சிப்பாக்கத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (43) என்பதும், வாக்காளர்களுக்கு வழங்கும் வகையில் மதுபாட்டில்கள் எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. மதுபாட்டில்களை கைப்பற்றிய அதிகாரிகள், இது குறித்த கிருஷ்ணமூர்த்தி மீது ஒலக்கூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
Embed widget