இடதுசாரிகளுக்கு அங்கீகாரம் தர திமுக தவறிவிட்டது: விழுப்புரத்தில் பாலகிருஷ்ணன் பகிரங்கக் குற்றச்சாட்டு!
தேர்தலில் குறைந்த இடங்களை அளித்து, இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது !

விழுப்புரம் : தேர்தலில் குறைந்த இடங்களை அளித்து, இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது. அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. கடந்த காலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு:
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்கிற செய்தியை தான் எல்லா கருத்துக்கணிப்புகளும் தெளிவாக கூறியுள்ளனர். பாஜக எத்தனை பகல் வேடம் போட்டாலும். மோடி, அமித்ஷா தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை படை எடுத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு இடம் அளிக்க மாட்டார்கள் என்பது இந்த தேர்தலில் மீண்டும் உறுதியாகியுள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுகவுக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.
வருகின்ற காலத்தில் திமுக எப்படி ஆட்சி நடத்தப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இடதுசாரிகளுக்கு ஆறு இடங்களை ஒதுக்க வேண்டும் என எவ்வளவோ வற்புறுத்தியும் திமுக தலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தருவதற்கு திமுக மறுத்துவிட்டது என்பது தான் உண்மை. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடம் அளிக்கக்கூடாது என்கிற அடிப்படையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம். அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. பல்வேறு துறைகளில் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை திமுக அரசாங்கம் செய்ய தவறிவிட்டது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இரட்டை இலக்கு பொருளாதாரம் வளர்ச்சி என அமைச்சர்கள் பெருமை பேசுகிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் உழைப்பாளர் தான். இரட்டை இலக்க வளர்ச்சியை கொடுக்கும் தொழிலாளர்களுக்கு அரசு என்ன கொடுக்கிறது என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.
வேற எந்த தேர்தலையும் விட இந்த தேர்தலில் இளைஞர்களிடம் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்கிற அரசியல் புரிதல் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி வரவேற்கத்தக்கது.
வணிக சிலிண்டரின் விலை இன்றைக்கு மட்டுமே 900 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. சாலையோர கடைகள் மூடும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள யுத்தம் தான். தமிழ்நாட்டிற்கு பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
பாஜக இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தாலும், திமுக ஆட்சி கடைப்பிடிக்ககூடிய கொள்கையில் மக்கள் நலன் பாதிக்கப்படும் போது குறிப்பாக பணி நிரந்தரம், தொழிலாளிகள் மீதான அடக்குமுறை, வழக்கு ரத்து இப்படிப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியான போராட்டங்களை முன்னெடுக்கும். என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















