மேலும் அறிய

Lok Sabha Election 2024: 3வது பெரிய கூட்டணியான நாங்கள் நிச்சயம் வெல்வோம் திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் - நயினார் நாகேந்திரன்

நான் வெற்றி பெற்றால் தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தவும், இரு புறங்களும் சாலைகள் அமைப்பதற்கும் நிச்சயமாக மத்திய அரசின் நிதியும், மாநில அரசின் ஒப்புதலையும் பெற்று அதற்கான முயற்சியில் ஈடுபடுவேன்.

நெல்லை சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நயினார் நாகேந்திரன் இருக்கிறார். இந்த நிலையில் தற்பொழுது அவர் திருநெல்வேலி பாராளுமன்றம் வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாக கட்சி தலைமைக்கு தெரிவித்ததோடு தலைமை அறிவிப்பு முன்பாகவே அவர் தேர்தல் காரியாலையத்தை திறந்து வைத்தார். அதோடு தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில்  நேற்று மாலை பாரத ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அப்போது முதலில் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்தது. இதுகுறித்து தகவலறிந்த நயினார் நாகேந்திரன் அதிர்ச்சியடைந்தார். தொடர்ச்சியாக நெல்லையில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் நயினார் நாகேந்திரனுக்கு தூத்துக்குடியில் வாய்ப்பு வழங்கப்பட்டது கட்சியினர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியதோடு அவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் சற்று நேரத்திலேயே திருத்தி அமைக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது. அதில் திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்தது. அதன்பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்ட நயினார் நாகேந்திரனுக்கு அவரது இல்லத்தில் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். 


Lok Sabha Election 2024: 3வது பெரிய கூட்டணியான நாங்கள் நிச்சயம் வெல்வோம் திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் - நயினார் நாகேந்திரன்

மேலும் அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு சால்வை போத்தியும் இனிப்பு வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார்  நாகேந்திரன் கூறும் பொழுது,  திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய தலைவர்களுக்கு நன்றி. திருநெல்வேலி தொகுதியில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் இந்த வாய்ப்பினை வழங்கியதற்கு நன்றி. அமைச்சராக இருந்த காலம் முதல் தற்போது வரை இந்த தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளையும், பணிகளையும் செய்துள்ளேன். இன்னும் பாராளுமன்ற உறுப்பினராக என்னை வெற்றி பெறச் செய்யும் வகையில் வாய்ப்பு வழங்கினால் இந்த மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, மத்திய அரசின் நிதி அனைத்தையும் பெற்று தருவேன்.

பல்வேறு தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்பின்படி நரேந்திரமோடி அவர்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவார் என்ற செய்தி வருகிறது. மீண்டும் 3 வது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார்.  நான் வெற்றி பெற்றால் தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தவும், இரு புறங்களும் சாலைகள் அமைப்பதற்கும் நிச்சயமாக மத்திய அரசின் நிதியும், மாநில அரசின் ஒப்புதலையும் பெற்று அதற்கான முயற்சியில் ஈடுபடுவேன். என்னால் முடிந்த நன்மைகளை இந்த மக்களுக்கு  தொடர்ச்சியாக செய்வேன் என்றார். மேலும் திமுக அரசு அறிவித்திருக்கும் சிலிண்டர் விலை குறைப்பு பெட்ரோல் விலை குறைப்பு என்பது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் செயல்.  சட்டமன்றத் தேர்தலில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்று கூறி ஒரு சில குடும்பத்தினருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். இதனால் நிறைய மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதனை இந்த தேர்தலில் காட்டுவர். திருமண உதவித் தொகை திட்டத்தை எடுத்துவிட்டு மாணவர்களுக்கு ஆயிரம் என்கின்றனர். தேர்தலுக்காக இப்படி கவர்ச்சியான திட்டங்களை கொடுக்கின்றனர். ஏற்கனவே இரண்டு கூட்டணி முடிந்து போய்விட்டது. மூன்றாவது பெரிய கூட்டணி எங்கள் கூட்டணி தான். நிச்சயமாக வெல்வோம். திமுகவின் எதிர்ப்பு அலைகளை கூறியே எனது வாக்கு சேகரிப்பு இருக்கும் என்றும் வருகின்ற 25ஆம் தேதி காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார்

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget