மேலும் அறிய

Lok Sabha Election 2024: 3வது பெரிய கூட்டணியான நாங்கள் நிச்சயம் வெல்வோம் திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் - நயினார் நாகேந்திரன்

நான் வெற்றி பெற்றால் தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தவும், இரு புறங்களும் சாலைகள் அமைப்பதற்கும் நிச்சயமாக மத்திய அரசின் நிதியும், மாநில அரசின் ஒப்புதலையும் பெற்று அதற்கான முயற்சியில் ஈடுபடுவேன்.

நெல்லை சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நயினார் நாகேந்திரன் இருக்கிறார். இந்த நிலையில் தற்பொழுது அவர் திருநெல்வேலி பாராளுமன்றம் வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாக கட்சி தலைமைக்கு தெரிவித்ததோடு தலைமை அறிவிப்பு முன்பாகவே அவர் தேர்தல் காரியாலையத்தை திறந்து வைத்தார். அதோடு தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில்  நேற்று மாலை பாரத ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அப்போது முதலில் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்தது. இதுகுறித்து தகவலறிந்த நயினார் நாகேந்திரன் அதிர்ச்சியடைந்தார். தொடர்ச்சியாக நெல்லையில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் நயினார் நாகேந்திரனுக்கு தூத்துக்குடியில் வாய்ப்பு வழங்கப்பட்டது கட்சியினர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியதோடு அவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் சற்று நேரத்திலேயே திருத்தி அமைக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது. அதில் திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்தது. அதன்பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்ட நயினார் நாகேந்திரனுக்கு அவரது இல்லத்தில் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். 


Lok Sabha Election 2024: 3வது பெரிய கூட்டணியான நாங்கள் நிச்சயம் வெல்வோம் திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் - நயினார் நாகேந்திரன்

மேலும் அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு சால்வை போத்தியும் இனிப்பு வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார்  நாகேந்திரன் கூறும் பொழுது,  திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய தலைவர்களுக்கு நன்றி. திருநெல்வேலி தொகுதியில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் இந்த வாய்ப்பினை வழங்கியதற்கு நன்றி. அமைச்சராக இருந்த காலம் முதல் தற்போது வரை இந்த தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளையும், பணிகளையும் செய்துள்ளேன். இன்னும் பாராளுமன்ற உறுப்பினராக என்னை வெற்றி பெறச் செய்யும் வகையில் வாய்ப்பு வழங்கினால் இந்த மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, மத்திய அரசின் நிதி அனைத்தையும் பெற்று தருவேன்.

பல்வேறு தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்பின்படி நரேந்திரமோடி அவர்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவார் என்ற செய்தி வருகிறது. மீண்டும் 3 வது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார்.  நான் வெற்றி பெற்றால் தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தவும், இரு புறங்களும் சாலைகள் அமைப்பதற்கும் நிச்சயமாக மத்திய அரசின் நிதியும், மாநில அரசின் ஒப்புதலையும் பெற்று அதற்கான முயற்சியில் ஈடுபடுவேன். என்னால் முடிந்த நன்மைகளை இந்த மக்களுக்கு  தொடர்ச்சியாக செய்வேன் என்றார். மேலும் திமுக அரசு அறிவித்திருக்கும் சிலிண்டர் விலை குறைப்பு பெட்ரோல் விலை குறைப்பு என்பது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் செயல்.  சட்டமன்றத் தேர்தலில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்று கூறி ஒரு சில குடும்பத்தினருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். இதனால் நிறைய மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதனை இந்த தேர்தலில் காட்டுவர். திருமண உதவித் தொகை திட்டத்தை எடுத்துவிட்டு மாணவர்களுக்கு ஆயிரம் என்கின்றனர். தேர்தலுக்காக இப்படி கவர்ச்சியான திட்டங்களை கொடுக்கின்றனர். ஏற்கனவே இரண்டு கூட்டணி முடிந்து போய்விட்டது. மூன்றாவது பெரிய கூட்டணி எங்கள் கூட்டணி தான். நிச்சயமாக வெல்வோம். திமுகவின் எதிர்ப்பு அலைகளை கூறியே எனது வாக்கு சேகரிப்பு இருக்கும் என்றும் வருகின்ற 25ஆம் தேதி காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
Embed widget