Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Assembly Election 2026 Voter Turnout: புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநிலங்களிலும் மதியம் 1 மணிக்கு 56+சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 9) சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 1 மணி நிலவரப்படி 55 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகி உள்ளன.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் அறிவிப்பை கடந்த மாதம் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, பாண்டிச்சேரி உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு ஏப்ரல் 9ஆம் தேதியான இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
1 மணி நிலவரம்
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதியம் 1 மணிக்கு 56+சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்கு தடையின்றி வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய, 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அசாமில் 126 தொகுதிகளுக்கும் கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதம் இதோ!
புதுச்சேரி - 56.47 சதவீத வாக்குப்பதிவு
கேரளா - 58.89 சதவீத வாக்குப்பதிவு
அசாம்- 58.26 சதவீத வாக்குப்பதிவு

காலை 9 மணி நிலவரம்
அசாமில் காலை 9 மணிக்கு 17.87 சதவீத வாக்குகள் பதிவாகின. கேரளாவில் 16.23 சதவீத வாக்குகளும் புதுச்சேரியில் 17.41 சதவீத வாக்குகளும் செலுத்தப்பட்டு இருந்தன.
காலை 11 மணி நிலவரப்படி, அசாமில் 38.92 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. கேரளாவைப் பொறுத்தவரை 33.28 சதவீத வாக்குகளை மக்கள் செலுத்தி இருந்தனர். அதே நேரத்தில் புதுச்சேரியில் 37.06 சதவீத வாக்குகள் பதிவாகின.
எப்போது வரை வாக்குப் பதிவு?
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 4ஆம் தேதி அன்று மொத்தமாக வெளியாகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்




















