மேலும் அறிய

A.C.Shanmugam: வேலூர் தொகுதியில் பா.ஜ.க. சின்னத்தில் ஏ.சி.சண்முகம் போட்டி

A.C.Shanmugam : வரும் மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் வேலூரில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகளையும் மாநிலத்தில் பலமாக உள்ள மாநிலக் கட்சிகளுடனும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெறாத அதேநேரத்தில் மக்கள் மத்தியில் ஓரளவிற்கு செல்வாக்கு பெற்றுள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. 

ஏ.சி.சண்முகம்:

தமிழ்நாட்டைப் பெறுத்தவரையில் மிகவும் கவனம் பெற்றுள்ள கூட்டணி என்றால் அது ஆளும் திமுக இடம் பெற்றுள்ள I.N.D.I.A கூட்டணி, தேசிய அளவில் பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் தனிக் கூட்டணி என மும்முனைப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இது இல்லாமல் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களமிறங்குகின்றது. 

பாஜக கூட்டணியில் இதுவரை கூட்டணிக் கட்சிகள் எதுஎது உள்ளது, யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள், எவ்வளவு தொகுதிகள் என இன்னும் முடிவாகத நிலையில். புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் பாஜக கூட்டணியில் தான் வேலூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் தாமரைச் சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். 

தாமரை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் போட்டி:

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ” வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதி கட்சி போட்டியிடுகிறது. எனவே புதிய நீதிக் கட்சி சார்பில் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம். தாமரை சின்னத்தில் போட்டியிட 15 வேட்பார்கள் போட்டியிட தேர்தல் களத்தில் உள்ளனர்.  மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் குறைந்தது 20 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் மும்முனை போட்டியாக தேர்தல் களம் இருந்தாலும் வேலூர் கோட்டையில் தாமரை மலரும். மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்திற்குள் அதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம்” எனவும் தெரிவித்துள்ளார். 

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த தொகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அப்போது அவர் அதிமுகவின் நேரடி வேட்பாளாராக களமிறங்கியிருந்தார். அதன் பின்னர் கடந்த 2001ஆம் ஆண்டு புதிய நீதி கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். இதில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுகவின் கதிர் ஆனந்த் -இடம் தோல்வியைச் சந்தித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Embed widget