மேலும் அறிய

Tuticorine : தூத்துக்குடி - நெல்லை இடையே இயக்கப்படுமா பயணிகள் ரயில்..? எதிர்பார்ப்பில் பொதுமக்கள், மாணவர்கள்..!

தூத்துக்குடி - நெல்லை இடையே மெமு ரயிலை இயக்க வேண்டும் என்று மாணவர்கள் உள்பட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தூத்துக்குடி தொழில்நகரமாக வளர்ந்து உள்ளது. இங்கு வெளியூர்களில் இருந்து ஏராளமானவர்கள் பணி உள்ளிட்ட பல்வேறு காரணமாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  வந்து செல்கின்றனர். தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, மைசூருக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வாராந்திர ரயிலாக தூத்துக்குடியில் இருந்து குஜராத்தில் உள்ள ஓகாவிற்கு ஞாயிறுதோறும் இயக்கப்படுகிறது.


Tuticorine : தூத்துக்குடி - நெல்லை இடையே இயக்கப்படுமா பயணிகள் ரயில்..? எதிர்பார்ப்பில் பொதுமக்கள், மாணவர்கள்..!

தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி வரை உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு ரெயில் சேவை உபயோகமாக உள்ளது. அங்கு பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ரெயில்களில் சீசன் டிக்கெட் பெற்று தூத்துக்குடி, நெல்லைக்கு சென்று படித்து வந்தனர். கொரோனா காலத்தில் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன. பின்னர் படிப்படியாக ரெயில்கள் இயக்கப்பட்டாலும் பயணிகளுக்கு சாதகமான சூழல் அமையவில்லை என்ற கருத்தே நிலவி வருகிறது.

Tuticorine : தூத்துக்குடி - நெல்லை இடையே இயக்கப்படுமா பயணிகள் ரயில்..? எதிர்பார்ப்பில் பொதுமக்கள், மாணவர்கள்..!

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பயன் தராத நேரத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். அதே போன்று தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டானில் மெமு ரெயில்கள் பராமரிப்பு மையம் அமைத்து, தூத்துக்குடி-நெல்லை இடையே மெமு(மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரெயில்களையும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து உள்ளது.


Tuticorine : தூத்துக்குடி - நெல்லை இடையே இயக்கப்படுமா பயணிகள் ரயில்..? எதிர்பார்ப்பில் பொதுமக்கள், மாணவர்கள்..!

இது குறித்து மணியாச்சி பகுதியை சேர்ந்த மாணவர்கள் கூறும்போது, "எங்க ஊருக்கு பஸ் போக்குவரத்து குறைவாக உள்ளது. இதனால் ரெயிலை நம்பி தான் இருக்கோம். எங்கள் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த ரெயிலை பயன்படுத்தி வந்தோம். நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு மாலையில் இயக்கப்படும் ரெயில் நீண்ட நேரம் மணியாச்சியில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இரவு 7 மணிக்கு பிறகே அந்த ரெயில் தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறது. இதனால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இந்த ரெயிலை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். கொரோனாவுக்கு முன்பு இயங்கியது போன்று மாலை 5 மணிக்கே அந்த ரெயிலை இயக்க வேண்டும். அதே போன்று தூத்துக்குடியில் இருந்து காலை 7.50 மணிக்கு குருவாயூர் ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் நிறுத்தப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக 8.30 மணிக்கு வழக்கமான பயணிகள் ரெயிலே இயக்கப்பட்டு வருகிறது. இதில் செல்லும் போது குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. ஆகையால் இந்த ரெயிலை மாணவர்கள், தொழிலாளர்கள் நலன் கருதி முன்கூட்டியே இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.


Tuticorine : தூத்துக்குடி - நெல்லை இடையே இயக்கப்படுமா பயணிகள் ரயில்..? எதிர்பார்ப்பில் பொதுமக்கள், மாணவர்கள்..!

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தை சேர்ந்த பிரம்மநாயகத்திடம் கேட்டபோது,  "நெல்லை-தூத்துக்குடி இடையே தினமும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பஸ்களில் பயணித்து வருகின்றனர். இதனால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தூத்துக்குடி-நெல்லை இடையே ரெயில் பயணம் அதிக நேரமாவதால் மக்கள் அதனை விரும்புவது இல்லை.


Tuticorine : தூத்துக்குடி - நெல்லை இடையே இயக்கப்படுமா பயணிகள் ரயில்..? எதிர்பார்ப்பில் பொதுமக்கள், மாணவர்கள்..!

இதனால் தூத்துக்குடி-நெல்லை இடையே மின்மயமாக்கும் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு உள்ளன. ஆகையால் மெமு ரெயில்களை இயக்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும். இந்த மெமு ரெயிலை மணியாச்சி பைபாஸ் வழியாக இயக்கினால் பயண நேரம் வெகுவாக குறையும். மதுரை கோட்டத்தில் மெமு பராமரிப்பு மையம் இதுவரை அமைக்கப்படவில்லை. அதனை தூத்துக்குடி மீளவிட்டானில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அதே போன்று ரெயில் நிலையத்துக்கு வரும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் ரெயில் நிலையத்தின் முன்பு பழைய ரெயில் தண்டவாளம் இருந்த இடத்தில் சாலை அமைக்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்ல முடியும். இந்த பணிகளை விரைந்து செயல்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ICAI CA Exam: சிஏ தேர்வுகள் எப்போது? ஆடிட்டர் கனவில் இருப்போருக்கு இதோ முழு அட்டவணை
ICAI CA Exam: சிஏ தேர்வுகள் எப்போது? ஆடிட்டர் கனவில் இருப்போருக்கு இதோ முழு அட்டவணை
தஞ்சாவூரில் இன்று 12 மையங்களில் நீட் தேர்வை 5,165 பேர் எழுதுகின்றனர்
தஞ்சாவூரில் இன்று 12 மையங்களில் நீட் தேர்வை 5,165 பேர் எழுதுகின்றனர்
நீங்கிய தடை; தமிழ்நாட்டில் இனி 6 புது அரசு மருத்துவக் கல்லூரிகள்- அன்புமணி நம்பிக்கை
நீங்கிய தடை; தமிழ்நாட்டில் இனி 6 புது அரசு மருத்துவக் கல்லூரிகள்- அன்புமணி நம்பிக்கை
மதுரை மாவட்டத்தில் உள்ள 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு  8,578 தேர்வர்கள் பங்கேற்கின்றனா் !
மதுரை மாவட்டத்தில் உள்ள 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு  8,578 தேர்வர்கள் பங்கேற்கின்றனா் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK complains against BJP : வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க பாஜக சதி.! தேர்தல் ஆணையம், டிஜிபியை திடீரென அலர்ட் செய்யும் திமுக
வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க பாஜக சதி.! தேர்தல் ஆணையம், டிஜிபியை திடீரென அலர்ட் செய்யும் திமுக
Agni Natchathiram 2026: கொளுத்தும் வெயில்.. நாளை முதல் அக்னி நட்சத்திரம்- என்ன செய்ய வேண்டும்? கூடாது?
Agni Natchathiram 2026: கொளுத்தும் வெயில்.. நாளை முதல் அக்னி நட்சத்திரம்- என்ன செய்ய வேண்டும்? கூடாது?
Summer Power Cut : கொளுத்தும் வெயில்.! தமிழகத்தில் மின் வெட்டா.? பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை சொன்ன மின் வாரியம்
கொளுத்தும் வெயில்.! தமிழகத்தில் மின் வெட்டா.? பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை சொன்ன மின் வாரியம்
சென்னை விமான நிலையத்தில் சினிமா பாணி பரபரப்பு: ஓடும் விமானத்திலிருந்து குதித்த பயணி!
சென்னை விமான நிலையத்தில் சினிமா பாணி பரபரப்பு: ஓடும் விமானத்திலிருந்து குதித்த பயணி!
NEET UG 2026: நீட் தேர்வு இன்று; மையத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள், நேரம், கட்டுப்பாடு, விதிகள்- முழு விவரம்
NEET UG 2026: நீட் தேர்வு இன்று; மையத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள், நேரம், கட்டுப்பாடு, விதிகள்- முழு விவரம்
NEW RATION CARD : புதிய ரேஷன் கார்டு வாங்க காத்திருக்கீங்களா.! விண்ணப்பிக்க மீண்டும் சான்ஸ்- எப்போ தெரியுமா.?
புதிய ரேஷன் கார்டு வாங்க காத்திருக்கீங்களா.! விண்ணப்பிக்க மீண்டும் சான்ஸ்- எப்போ தெரியுமா.?
Sundar C: தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவை விட்டு விலகுவேன்.. சுந்தர்.சி அறிவிப்பு!
Sundar C: தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவை விட்டு விலகுவேன்.. சுந்தர்.சி அறிவிப்பு!
TN Assembly Election 2026 :நாளை வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்.? முன்னிலை நிலவரம் எத்தனை மணிக்கு தெரியும்- லேட்டஸ்ட் அப்டேட் இதோ
நாளை வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்.? முன்னிலை நிலவரம் எத்தனை மணிக்கு தெரியும்- லேட்டஸ்ட் அப்டேட் இதோ
Embed widget