மேலும் அறிய

UPSC Result 2022: கால்கள் இல்லை; 3 விரல்தான்! அதனால் என்ன?- யுபிஎஸ்சி தேர்வில் வென்ற இளைஞரின் உத்வேகக் கதை

2017-ல் காஸியாபாத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் தனது இரு கால்களையும் இழந்தார் சூரஜ் திவாரி. அப்போது ஒரு கையும் மற்றொரு கையில் 2 விரல்களும் பறிபோயின.

2022ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், இதில் நாடு முழுவதும் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் கடுமையான போட்டித் தேர்வாகக் கருதப்படும் யுபிஎஸ்சி தேர்வை பல்வேறு வகையான பின்னணியில் இருந்து வந்த மாணவர்கள் எழுதி, வெற்றிவாகை சூடியுள்ளனர். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசுச் செயலாளருமான ஜகந்நாதனின் மகள் சத்ரியா கவின் (D.J. Chathriya Kavin) அகில இந்திய அளவில் 169 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

அதேபோல தமிழ்நாடு அரசுத் தொழிலாளர் ஆணையரக அரசு முதன்மைச்  செயலாளர் / ஆணையருமான அதுல் ஆனந்த்தின் மகள் தேர்வர் ஈஷானி (Eshani) 291 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.  பெருநகர சென்னை மாநகராட்சி அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளருமான டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் இராதாகிருஷ்ணன் (Arvind Radhakrishnan) 361ஆவது இடத்தை பிடித்துள்ளார். 

சாதித்த சகோதரிகள்

 கடலூர் அருகே ஒரே வீட்டில் இருந்து இரு சகோதரிகள் யுபிஎஸ்சி தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளனர்.பண்ருட்டி விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கை இருவரும் குடிமைப் பணி அதிகாரிகளாகி உள்ளனர். தங்கை ஏற்கெனவே யுபிஎஸ்சி தேர்வெழுதி தேர்ச்சி பெற்று சாதனை படைத்த நிலையில், அக்கா தற்போது குடிமைப் பணியில்  தேர்ச்சி பெற்றுள்ளார். தங்கை ஐஸ்வர்யா ராமநாதன் சார் ஆட்சியராக உள்ள நிலையில், அக்கா சுஷ்மிதாவும் தற்பொழுது யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் சூரஜ் திவாரி, யுபிஎஸ்சி தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் 2022ஆம் ஆண்டு தேர்வு முடிவில் 917ஆவது இடத்தைபிடித்துள்ளார். 


UPSC Result 2022: கால்கள் இல்லை; 3 விரல்தான்! அதனால் என்ன?- யுபிஎஸ்சி தேர்வில் வென்ற இளைஞரின் உத்வேகக் கதை

யார் இந்த சூரஜ் திவாரி?

உ.பி. மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள குரவலி கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ் திவாரி. இவர் 2017-ல் காஸியாபாத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் தனது இரு கால்களையும் இழந்தார். அப்போது ஒரு கையும் மற்றொரு கையில் 2 விரல்களும் பறிபோயின. தையல்காரராகப் பணியாற்றும் தந்தை. இல்லத்தரசி தாய் என நடுத்தரக் குடும்பம் அவர்களுடையது. பொருளாதார சூழ்நிலை, மாற்றுத் திறன் ஆகிய இன்னல்களுக்கு இடையிலும் விடாமல் படித்தார் திவாரி. 

விடாமுயற்சிக்குப் பரிசாய் 2022ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 917ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் சூரஜ் திவாரி. இதுகுறித்து அவரின் தந்தை ரமேஷ் குமார் திவாரி கூறும்போது, இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். என்னுடைய மகன் என்னைப் பெருமை படுத்தி இருக்கிறார். அவன் மிகவும் தைரியமானவன். அவன் வெற்றிபெற 3 விரல்களே போதுமானதாக இருந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.   

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget