![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
UPSC Civil Services Prelims 2023: நாடு முழுவதும் நாளை யுபிஎஸ்சி தேர்வு; என்னென்ன கட்டுப்பாடுகள்?
குடிமைப் பணிக்கான 2023 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலைத்தேர்வு (Prelims Exam) நாளை இந்தியா முழுவதும் நடக்கிறது.
![UPSC Civil Services Prelims 2023: நாடு முழுவதும் நாளை யுபிஎஸ்சி தேர்வு; என்னென்ன கட்டுப்பாடுகள்? UPSC Civil Services Prelims 2023: Follow these exam day guidelines tomorrow UPSC Civil Services Prelims 2023: நாடு முழுவதும் நாளை யுபிஎஸ்சி தேர்வு; என்னென்ன கட்டுப்பாடுகள்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/27/d70316825d154be3b2a0e59a7b10263e1685185497608332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குடிமைப் பணிக்கான 2023 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலைத்தேர்வு (Prelims Exam) நாளை இந்தியா முழுவதும் நடக்கிறது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.
2022ஆம் ஆண்டில் 933 பேர் தேர்ச்சி
இந்த நிலையில் 20222ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் 6ஆம் தேதி அன்று வெளியாகின.
முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் மே 18 வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 23 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
இந்த நிலையில் குடிமைப் பணிக்கான 2023 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலைத்தேர்வு (Prelims Exam) நாளை இந்தியா முழுவதும் நடக்கிறது.
இரு வேளைகள் தேர்வு
இரண்டு தாள்களும் காலை, மதியம் என இரு வேளைகளில் நடைபெற உள்ளது. பொது படிப்புகள் எனப்படும் ஜிஎஸ் (GS I) தாளுக்கான தேர்வு காலையிலும் சிசேட் (CSAT) தேர்வு மதியமும் நடைபெறுகிறது.
காலை 9 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 11.30 மணிக்கு முடிகிறது. இதற்குக் காலை 9.20 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் தேர்வு மையத்தின் உள்ளே இருக்க வேண்டும்.
சிசேட் தேர்வு மதியம் 2.30 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிகிறது. இதற்குத் தேர்வர்கள் மதியம் 2.20 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்தின் உள்ளே இருக்க வேண்டும். அதற்குப் பிறகு யாரும் உள்ளே சென்று தேர்வு எழுத முடியாது.
தேர்வர்கள் மொபைல் போனை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. அதேபோல பேஜர், பென் டிரைவ், ஸ்மார்ட் வாட்ஸ் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது.
அதே நேரத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுத புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் upsconline.nic.in அல்லது upsc.gov.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து, நுழைவுச் சீட்டைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)