மேலும் அறிய

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு - பீகாரை சேர்ந்த சுபம் குமார் முதலிடம்!

இந்திய ஆட்சித் துறையில் 36 பணியிடங்களும் இந்திய வெளியுறவு துறையில் 200 பணியிடங்களும் இந்திய காவல் துறையில் 302 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையமான UPSC தேர்வில் பீகாரை சேர்ந்த சுபம் குமார் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய நிர்வாகத்துறை (IAS), இந்திய வெளியுறவுத் துறை (IFS), இந்திய காவல் துறை (IPS) போன்ற பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வு மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அதன்படி 2020 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி ஆரம்ப கட்ட தேர்வுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கான மெயின் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டனர். 

இதில் இந்திய நிர்வாகத் துறை, இந்திய வெளியுறவுத் துறை, இந்திய காவல் துறை, குரூப் ஏ மற்றும் குரூப் பி பணிகளுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. அனைத்துக் கட்ட தேர்வுகள் நிறைவடைந்ததை அடுத்து தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி. வெளியிட்டு இருக்கிறது. அந்த முடிவின்படி தேர்வில் பங்கேற்ற 761 பேருக்கு பணி வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 151 பேருக்கு தற்காலிக பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இதில் தேர்வாளர்கள் பெற்று இருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எப்,எஸ். குரூப் ஏ மற்றும் குரூப் பி என வகைப்படுத்தப்பட்டு அந்த துறைகளில் பணி வழங்கப்படும். இதன் மூலம், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 836 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். குறிப்பாக இந்திய ஆட்சித் துறையில் 36 பணியிடங்களும் இந்திய வெளியுறவு துறையில் 200 பணியிடங்களும் இந்திய காவல் துறையில் 302 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

 இந்த தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுபம் குமார் என்பவர் முதலிடம் பிடித்து இருக்கிறார். இவர்கள் மும்பை ஐஐடியில் படித்து பட்டம் பெற்றவர். ஜக்ராதி அவஸ்தி என்பவர் இந்த தேர்வில் 2 வது இடத்தையும், யாஷ் ஜலுகா மற்றும் மம்தா யாதவ் 3 வது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர். யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை http//www.upsc.gov.in. என்ற அதன் இணையதளத்தில் அறியலாம். முடிவுகளுக்கான லிங்க் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவுகள் குறித்து கூடுதல் விபரங்களை அறிய தேர்வு மையங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.  காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அங்கு சென்று சந்தேகங்களை கேட்டுப்பெறலாம். அல்லது 23385271, 23381125, 23098543 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு அறியலாம். முழுமையான மதிப்பெண் விபரங்கள் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்து இருக்கிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget