மேலும் அறிய

School building: பாதுகாப்பில்லாத பள்ளிக்‌ கட்டிடங்கள்; திமுக அரசின்‌ மெத்தனப்‌போக்கு.. ஓபிஎஸ் கண்டனம்

பாதுகாப்பற்ற நிலையில்‌ உள்ள பள்ளிக்‌ கட்டிடங்களை சீரமைத்து மாணவ, மாணவியரின்‌ பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துவதாக ‌ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பற்ற நிலையில்‌ உள்ள பள்ளிக்‌ கட்டிடங்களை சீரமைத்து மாணவ, மாணவியரின்‌ பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துவதாக ‌ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:

’’கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, சின்னசேலம்‌ அருகே உள்ள வி.மாமாந்தூர்‌ கிராமத்தில்‌ உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளியில்‌ மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று மாணவிகள்‌ உள்பட நான்கு பேர்‌ படுகாயம்‌ அடைந்துள்ளதாக வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, மாணவ, மாணவியரின்‌ பாதுகாப்பிற்கு உத்தரவாதம்‌ இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம்‌ திருநெல்வேலியில்‌ உள்ள ஒரு தனியார்‌ பள்ளியில்‌ கழிப்பறைச்‌ சுவர்‌ இடிந்து விழுந்ததில்‌ மூன்று மாணவர்கள்‌ பரிதாபமாக உயிரிழந்ததோடு, நான்கு மாணவர்கள்‌ படுகாயத்துடன்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டனர். அப்போதே, அரசுப்‌ பள்ளிகளில்‌ பழுதடைந்த கட்டுமானங்களை விரைந்து சீர்‌ செய்ய வேண்டுமென்றும்‌, தனியார்‌ பள்ளிகளில் பழுதடைந்த கட்டுமானங்களை உடனடியாக சீர்செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தவும்‌ நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரை வலியுறுத்தி நான்‌ அறிக்கை வெளியிட்டேன்‌.

பள்ளிக்‌ கல்வித்‌துறை அமைச்சரும்‌, ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ இடிந்து விழும்‌ நிலையில்‌ இருக்கும்‌ பள்ளிக்‌ கட்டிடங்கள்‌, விரிசல்‌ விழுந்துள்ள பள்ளிக்‌ கட்டிடங்கள்‌, செடிகள்‌ வளர்ந்துள்ள பள்ளிக்‌ கட்டடங்கள்‌ குறித்து விவரங்களைப்‌ பெற்று, அதன்‌ அடிப்படையில்‌ சீரமைப்பு மற்றும்‌ இடிக்கும்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌ என்றும்‌, கட்டிடங்கள்‌ இடிக்கப்படும்‌ பட்சத்தில்‌ மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள்‌ செய்து தரப்படும்‌ என்றும்‌, அருகிலுள்ள பள்ளியுடன்‌ இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள்‌ குறித்து ஆராயப்படும் என்றும்‌, இல்லையெனில்‌ பொதுவான கட்டிடம்‌ ஒன்றை வாடகைக்கு எடுத்து வகுப்புகள்‌ நடத்தப்படும்‌ என்றும்‌ இனி இதுபோன்ற நிகழ்வுகள்‌ நடைபெறக்கூடாது என்பதில்‌ தமிழ்நாடு அரசு கண்ணும்‌ கருத்துமாக இருக்கும்‌
என்றும்‌ தெரிவித்தார்‌.

இவ்வாறு உத்தரவாதம்‌ தரப்பட்டும்‌, இந்த ஆண்டு மார்ச்‌ மாதம்‌ ராமநாதபுரம்‌ மாவட்டம்‌, சாயல்குடி அருகில்‌ உள்ள வாகைகுளம்‌ கிராமத்தில்‌ அமைந்துள்ள அரசு தொடக்கப்‌ பள்ளியில்‌ மேற்கூரை இடிந்து விழுந்ததன்‌ காரணமாக இரண்டு மாணவர்கள்‌ காயமடைந்தனர்‌.


School building: பாதுகாப்பில்லாத பள்ளிக்‌ கட்டிடங்கள்; திமுக அரசின்‌ மெத்தனப்‌போக்கு.. ஓபிஎஸ் கண்டனம்

இதனைத்‌ தொடர்ந்து, நேற்று முன் தினம் (செப்.13) கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, சின்னசேலம்‌ அருகே உள்ள வி.மாமாந்தூர்‌ கிராமத்தில்‌ உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளியில்‌ போதிய இட வசதி இல்லாததன்‌ காரணமாக பழுதடைந்த கட்டிடத்தில்‌ வகுப்புகள்‌ நடைபெற்றதாகவும்‌, ஆறாம்‌ வகுப்பு மாணவர்கள்‌ வகுப்பறையில்‌ படித்துக்‌ கொண்டிருந்தபோது கட்டிடத்தின்‌ மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில்‌ மூன்று மாணவிகள்‌ உட்பட நான்கு பேருக்கு தலையில்‌ படுகாயம்‌ ஏற்பட்டு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்‌ ஊடகங்களில்‌ செய்திகள்‌ வந்துள்ளன.

அமைச்சரின் சென்ற ஆண்டு அறிவிப்பிற்குப்‌ பின்னும்‌, பழுதடைந்த கட்டிடங்களுக்கு மாணவ, மாணவியர்‌ அனுமதிக்கப்படுவதும்‌, அங்கு வகுப்புகள்‌ எடுக்கப்படுவதும்‌ ஏற்றுக்‌கொள்ளக்‌ கூடியதல்ல. மாறாக கடும்‌ கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசின்‌ மெத்தனப்‌ போக்கே மேற்படி விபத்திற்கு காரணம்‌ என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

படுகாயமடைந்து மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ள மாணவச்‌ செல்வங்கள்‌ விரைந்து பூரண குணமடைந்து இல்லம்‌ திரும்ப வேண்டும்‌ என்ற என்னுடைய விருப்பத்தினைத்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு, தமிழ்நாடு முதலமைச்சர்‌ இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, பழுதடைந்த கட்டிடங்களில்‌ மாணவ, மாணவியருக்கு வகுப்புகள்‌ எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும்‌, ஆசிரியர், மாணவ, மாணவியர்‌ ஆகியோரின்‌ பாதுகாப்பினை உறுதி செய்யவும்‌, இனிமேல்‌ இதுபோன்ற விபத்துகள்‌ நடக்காமல்‌ இருக்கவும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌’’.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget