மேலும் அறிய

UGC SOPs: க்யூட் தேர்வு இல்லாமலும் மாணவர் சேர்க்கை; மத்திய பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு- விவரம்!

க்யூட் தேர்வு எழுதிய மாணவர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட படிப்புகள், பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருந்தாலும் இல்லாவிட்டாலும்கூட கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மத்தியப் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வு மாணவர் சேர்க்கைக்குப் பிறகும் இளநிலை, முதுநிலை இடங்கள் காலியாக இருக்கும்பட்சத்தில் தாங்களாகவே நுழைவுத் தேர்வுகள் நடத்தி, மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.  

இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறி இருப்பதாவது:

’’மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 3 அல்லது 4 கட்டங்கள் முடிந்த பிறகும் சில மத்தியப் பல்கலைக்கழகங்களில் இடங்கள் காலியாக இருப்பது யுஜிசியின் கவனத்துக்கு வந்துள்ளது.

ஏராளமான மாணவர்களின் தரமான உயர் கல்வியை மறுப்பதாகும்

ஒட்டுமொத்த கல்வி ஆண்டுக்கும் இடங்களை காலியாக வைத்திருப்பது என்பது வளங்களை வீணடிப்பது மட்டுமல்ல, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர ஆசைப்படும் ஏராளமான மாணவர்களின் தரமான உயர் கல்வியை மறுப்பதாகும். எனினும் மாணவர் சேர்க்கையில், க்யூட் எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள்தான் பிரதானமாக இருக்க வேண்டும்.  

மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஏற்படும் காலி இடங்களை நிரப்பும் வகையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. க்யூட் தேர்வு எழுதிய மாணவர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட படிப்புகள், பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருந்தாலும் இல்லாவிட்டாலும்கூட கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

பாட சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில் தளர்வு

அதேபோல பல்கலைக்கழகங்கள் துறை வாரியாக குறிப்பிட்ட பாட சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில் தளர்வை மேற்கொள்ளலாம். அதற்குப் பிறகும் சீட்டுகள் காலியாக இருந்தால், பல்கலைக்கழகங்கள் தானாகவே நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். அல்லது சம்பந்தப்பட்ட துறை ஸ்க்ரீனிங் தேர்வை நடத்தலாம்.  

தகுதித் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டும் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கலாம். ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை நடைமுறையும் மெரிட் மற்றும் வெளிப்படைத் தன்மை அடிப்படையில் நடக்க வேண்டும்’’.

இவ்வாறு யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget