மேலும் அறிய

Smartphone Ban: பள்ளிகளில் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு உலகளாவிய தடை: யுனெஸ்கோ அதிரடி

பள்ளிகளில் ஸ்மார்ட் போன்களுக்கு உலகளாவிய அளவில் தடை விதிக்க வேண்டும் என்று உலக நாடுகளிடம் யுனெஸ்கோ வலியுறுத்தி உள்ளது.

பள்ளிகளில் ஸ்மார்ட் போன்களுக்கு உலகளாவிய அளவில் தடை விதிக்க வேண்டும் என்று உலக நாடுகளிடம் யுனெஸ்கோ வலியுறுத்தி உள்ளது.

அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு, யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கை (Global Education Monitoring Report 2023) வெளியிடப்பட்டது.

குறிப்பாக ‘Technology in Education: A Tool on Whose Terms’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், பள்ளிகளில் ஸ்மார்ட் போன்களுக்கு உலகளாவிய அளவில் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

’’தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி, கற்றலை மேம்படுத்தவில்லை. மாறாக மாணவர்களின் நல் வாழ்வை மோசமாக்குகிறது. மொபைல் சாதனங்கள் மாணவர்களை திசை திருப்புகின்றன; 14 நாடுகளில் கற்றலில் மோசமான அனுபவத்தை உருவாக்குகின்றன. எனினும் 4 நாடுகளுக்கு ஒரு நாட்டுக்கும் குறைவாகவே பள்ளிகளில் ஸ்மார்ட் போன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.  


Smartphone Ban: பள்ளிகளில் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு உலகளாவிய தடை: யுனெஸ்கோ அதிரடி 

 

மாணவர்கள் குறிப்பாக 2 முதல்17 வயது உடைய நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், "அதிக நேரம் திரையிலேயே செலவிடுவது (higher screen time) அவர்களின் நல்வாழ்வைக் குறைக்கிறது. குறைவான ஆர்வம், சுய கட்டுப்பாட்டை உண்டாக்குகிறது. நிலையில்லாத உணர்ச்சிகளை உருவாக்குகிறது. அதிக கவலையையும் மனச்சோர்வையும் ஏற்படுத்துகிறது" என்று கண்டறியப்பட்டது. 

கற்றல் திறனை மேம்படுத்தும்

பள்ளிகளில் மொபைல் போன்கள் தடை செய்யப்படுவது பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்தும். குறிப்பாக குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம், ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மனிதர்கள் மீது ஆளுமை செலுத்தக்கூடாது. இதில் மானுடர்களை மையப்படுத்திய பார்வை வேண்டும். 

 

கல்வி நிறுவனங்களில் தகவல் கசியும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 16 சதவீத நாடுகள் மட்டுமே வகுப்பறையில், தகவல் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. ஏராளமான தகவல்கள் முறையான வழிமுறைகள் இல்லாமல் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். இதனால் மாணவர்களின் தகவல்கள் கல்வி தவிர்த்த பிற காரணங்களுக்காகவும், பொழுதுபோக்கு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவை உரிமை மீறலாகும். இது சரிசெய்யப்பட வேண்டும். 

கற்றலைக் கைவிட்ட 50 கோடி பேர்

ஆன்லைன் கற்றலால் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததுதான். கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில், ஆன்லைன் மட்டுமே கொண்ட கற்பித்தல் முறையால், சுமார் 50 கோடி மாணவர்கள் உலகளாவிய அளவில் கற்றலைக் கைவிட்டனர். 

இந்த நிலையில் உலக நாட்கள், தொழில்நுட்பத்தைக் கல்வியில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தாங்களாகவே விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அந்தக் கற்றல், மனிதர்களுக்குப் பதில் கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்களை முதன்மைப்படுத்திய கற்றலாக இருக்க வேண்டும்.  

இவ்வாறு யுனெஸ்கோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunil Chhetri Retirement: அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்!  என்ன நடந்தது?
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்! என்ன நடந்தது?
Heavy Rains: மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunil Chhetri Retirement: அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
அதிர்ச்சி செய்தி! இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்!  என்ன நடந்தது?
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்! என்ன நடந்தது?
Heavy Rains: மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
Vijayakanth: “விஜயகாந்த்தை மிஸ் பண்றேன்.. அவர் மதுரை வீரன்” - வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்!
“விஜயகாந்த்தை மிஸ் பண்றேன்.. அவர் மதுரை வீரன்” - வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்!
Breaking News LIVE: டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் - அரவிந்த் கெஜ்ரிவால்
Breaking News LIVE: டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் - அரவிந்த் கெஜ்ரிவால்
Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
Embed widget