மேலும் அறிய

TNPSC Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு: எங்கெல்லாம் தேர்வு மையம்; என்னென்ன கட்டுப்பாடுகள்?- முழு விவரம்

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு எங்கெல்லாம் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தேர்வெழுத என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு எங்கெல்லாம் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தேர்வெழுத என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறும். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தேர்வு நடைபெறும் விதம்குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி மே 21ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதற்காகத் தேர்வர்கள் 8.30 மணிக்கு வர வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும். 

என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள்?

தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளன. இவ்வாறு 993 குழுக்கள் செயல்பட உள்ளன. 6,400 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆண் தேர்வர்கள் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேரும், பெண் தேர்வர்கள் 6 லட்சத்து 81 ஆயிரத்து 89 பேரும்  விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 48 பேர் விண்ணப்பித்துள்ளனர். 14 ஆயிரத்து 531 மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பித்துள்ளனர். 

79 ஆயிரத்து 942 பேர் தமிழ் வழியில் பயின்றதாக விண்ணப்பம் செய்துள்ளனர். 

எங்கெல்லாம் தேர்வு மையம்?

சென்னையில் அதிகபட்சமாக 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுத உள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5 ஆயிரத்து 624 பேர் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல மதுரையில் 64 ஆயிரத்து 82 பேரும், சேலத்தில் 63 ஆயிரத்து 437 பேரும் திருச்சியில் 50 ஆயிரத்து 19 பேரும் கோவையில் 48 ஆயிரத்து 39 பேரும் தேர்வு எழுதுகின்றனர். நாகப்பட்டினத்தில் 8 ஆயிரத்து 598 பேரும் மயிலாடுதுறையில் 11 ஆயிரத்து 561 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

பொது ஆங்கிலம் பகுதியில் தேர்வெழுத 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பொதுத் தமிழ் பகுதியில் தேர்வெழுத 9 லட்சத்துக்கு 46 ஆயிரத்து 589 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 

முதல்நிலைத் தேர்வை 3 முறை இலவசமாக எழுதலாம். இந்தப் பிரிவின் கீழ், 6 லட்சத்து 93 ஆயிரத்து 361 பேர் இலவசமாகத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வு முழுவதும் கொள்குறித் தேர்வு வகையில் நடைபெற உள்ளது’’.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TANCET 2026: எம்இ, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேரணுமா? டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TANCET 2026: எம்இ, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேரணுமா? டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
US Iran Peace Talk:
US Iran Peace Talk: "எங்ககிட்ட விளையாடாதீங்க!" - ஈரானுக்கு ஜே.டி. வேன்ஸ் கொடுத்த 'வெயிட்டான' வார்னிங்!
"ஜனநாயகத்தை காக்க தி.மு.க. கூட்டணி வெல்லும்!" சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் அதிரடி!
Vantara University: குஜராத்தில் வருகிறது வந்தாரா பல்கலைக்கழகம்! அடிக்கல் நாட்டினார் அம்பானி!
Vantara University: குஜராத்தில் வருகிறது வந்தாரா பல்கலைக்கழகம்! அடிக்கல் நாட்டினார் அம்பானி!
"மேடையை விட்டு இறங்க மாட்டார்" விமர்சனம் செய்த அன்புமணி; களத்தில் இறங்கி பதிலடி கொடுத்த விஜய்
ரயில்வே பாதுகாப்பில் புதிய புரட்சி! இன்டர்லாக் சிஸ்டம், தானியங்கி கேட் மூடும் வசதி! விபரம் இதோ!..
ரயில்வே பாதுகாப்பில் புதிய புரட்சி! இன்டர்லாக் சிஸ்டம், தானியங்கி கேட் மூடும் வசதி! விபரம் இதோ!..
Embed widget