மேலும் அறிய

நாளை முதல் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இது கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு என்னென்ன?

ஆசிரியர்கள், மாணவர்கள் நாளை (ஆகஸ்ட் 1) முதல் செயலி(TNSED App) மூலமே வருகைப் பதிவேட்டை(Attendance register) நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஆசிரியர்கள், மாணவர்கள் நாளை (ஆகஸ்ட் 1) முதல் TNSED செயலி மூலமே வருகைப் பதிவேட்டை(Attendance Register) நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பள்ளிக் கல்வித்துறை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இந்தக் கூட்டம்சென்னை, கோட்டூர்புரம்‌, அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில்‌ உள்ள கூட்ட அரங்கில்‌ 15.07.2022 மற்றும்‌ 16.07.2022 அன்று நடைபெற்றது. கூட்டத்தில்‌ விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள்‌ குறித்தும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட
முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌  அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் நகல்கள், பள்ளிக்‌ கல்வி அமைச்சர், முதன்மைச்‌ செயலர்‌, சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநர்‌, இல்லம்‌ தேடிக்‌ கல்வி சிறப்புப் பணி அலுவலர், மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநர், தொடக்கக்‌ கல்வி இயக்கக இயக்குநர்‌, அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக இயக்குநர்‌, மெட்ரிக்‌ பள்ளி இயக்கக இயக்குநர்‌, பள்ளிச்சாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்கக இயக்குநர்‌, பள்ளிக்‌ கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர்‌,  பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர்கள்‌, பள்ளிக்கல்வி ஆணையரக நிர்வாக அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. 

இந்த சுற்றறிக்கையில் துறை சார் இயக்குநர்களுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இதில் முக்கிய அம்சங்களாக,

* 1 ஆகஸ்ட்‌ 2022 முதல்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு வருகைப்‌ பதிவேட்டில்‌ பதிவு செய்ய வேண்டாம்‌. வருகைப்‌ பதிவை TNSED செயலி வாயிலாகப் பதிவு செய்தால்‌ மட்டும்‌ போதுமானது.

* ஆசிரியர்கள்‌ விடுமுறை விண்ணப்பிப்பதை TNSED செயலியில்‌ மட்டும்‌ விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட வேண்டும்‌.

* முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ சுயவிவரங்களை EMIS ஒருங்கிணைப்பாளர்‌ மூலம்‌ பதிவேற்றம்‌ செய்து முடிக்க வேண்டும்‌

* அரசு உதவி பெறும்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ ஆங்கிலோ இந்தியன்‌ பள்ளிகளில்‌ உபரி பணியிடங்களை தேவைப்படும்‌ அரசுப்‌ பள்ளிகளுக்கு மாற்றுப்பணி 15.08.2022 -க்குள்வழங்க வேண்டும்‌.

* மேல்நிலை மற்றும்‌ உயர்நிலை பள்ளிகளில்‌ காலியாக உள்ள தலைமை ஆசிரியர்‌ பணியிடங்களுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமனம்‌ செய்து நிர்வாகம்‌ மற்றும்‌ நிதி செலவினம்‌ மேற்கொள்ள முழு அதிகார ஆணை வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன. 


நாளை முதல் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இது கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு என்னென்ன?

அதேபோல தொழிற்கல்வி இணை இயக்குநருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலில், 

* நோட்டுப்‌ புத்தகம்‌, சீருடைகள்‌ மற்றும்‌ தொழிற்கல்வி பாடப்‌ புத்தகம்‌ பெற்று வழங்குவதில்‌ ஏற்படும்‌ காலதாமதத்தைக் குறைக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்‌.

* இந்தக்‌ கல்வியாண்டின்‌ இரண்டாம்‌ பருவ நிலைக்குத்‌ தேவையான புத்தகத் தேவைப்பட்டியலை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்‌.

* Special Case Incentive பெறும்‌ மாணவர்களின்‌ விவரத்தை அனுப்பி வைக்க வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டு நலப்பணித்‌ திட்டம் இணை இயக்குநருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலில், 

National Means Merit Scholarship பொறுத்த வரையில்‌ மாணவர்களின்‌ விவரத்தை உடனே சரிபார்த்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில்,  ஆகஸ்ட்‌ 1 முதல்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு வருகைப்‌ பதிவேட்டில்‌ பதிவு செய்யக் கூடாது. வருகைப்‌ பதிவை TNSED செயலி வாயிலாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. 

இதற்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மறுப்பு தெரிவித்திருந்தார். எனினும் தற்போது ஆகஸ்ட்‌ 1 முதல்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள் TNSED செயலி மூலமாக மட்டுமே வருகைப் பதிவேட்டைப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல விடுமுறை, தற்செயல் விருப்பு, மருத்துவ விடுப்பு, அனுமதி  உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் TNSED செயலி வழியாக பதிவு செய்வதே சிரமமாக உள்ள நிலையில், மாணவர்களின் வருகையைப் பதிவு செய்வது எப்படி என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!
CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
Rasi Palan Today (16-07-2026): இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? - மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள்!
Rasi Palan Today (16-07-2026): இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? - மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள்!
Embed widget