மேலும் அறிய

Free Textbooks: கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள்: தன்னார்வ அமைப்பு அறிவிப்பு- விவரம் இதோ!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல கல்லூரி மாணவர்கள் தங்களுடைய பாடப் புத்தகங்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய உள்ளோம். 

எந்தப் படிப்பாக இருந்தாலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு புத்தகங்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று தன்னார்வ அமைப்பு அறிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்தது.

கடும் பாதிப்பு

டிசம்பர் 17ஆம் தேதி அதிகாலை 2  மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதைத் தொடர்ந்து பொது மக்களும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட தமிழ்நாட்டில் பாதிப்பு

இதற்கிடையே மிக்ஜாம் புயலால் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.  

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு புத்தகங்களை இழந்த, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என Anandham Youth Foundation  என்ற தன்னார்வ அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’சென்னை கோடம்பாக்கத்தை மையமாகக் கொண்டு ஆனந்தம் யூத் பவுண்டேஷன் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று, கல்லூரிகளில் சேர வசதி இல்லாத கிராமப்புற ஏழை மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான முழு கல்வி செலவையும் ஏற்று அவர்களை படிக்க வைத்து வருகிறது இந்த அமைப்பு.

பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்கள்

தற்போது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல கல்லூரி மாணவர்கள் தங்களுடைய பாடப் புத்தகங்களை இழந்துள்ளனர். எனவே அவர்களுக்கு உதவி செய்ய உள்ளோம். 

அதில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களுடைய பாடப்புத்தகங்களை இழந்த பொறியியல், கலை அறிவியல், சட்டம் உள்ளிட்ட எந்த கல்லூரி படிப்பாக இருந்தாலும் வெள்ளத்தில் தங்களுடைய பாடப்புத்தகங்களை இழந்திருந்தால் 70109 87336 என்ற வாட்ஸப் எண்ணிற்கு பாதிக்கப்பட்ட புகைப்பட சான்றுகளை அனுப்பி, இலவசமாக பாடப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்’’.

இவ்வாறு ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: 70109 87336

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Embed widget