மேலும் அறிய

டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு: 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அநீதி! அரசு தீர்வு காணுமா?

TET தேர்வு நடத்துவது, ஆசிரியர்களைத் தயார்படுத்துவது அல்லது உதவி வழங்குவது குறித்து எவ்வித வழிகாட்டுதலும் இல்லை- பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், டெட் தகுதித் தேர்வு குறித்துக் கூறி உள்ளதாவது:

நீதிமன்றம் விசாரணை

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, அந்நாளைய அதிமுக அரசு தீவிர கவனம் செலுத்தியிருந்தால், ஆசிரியர்களுக்கு சாதகமான முடிவு கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது. அப்போது, பதவி உயர்வுக்கு மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வு (TET) கட்டாயம் என்ற உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் இதனை விரிவாக்கி, பணியில் தொடரவே TET தேவை என அறிவித்தது, 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயமற்ற சுமையாக அமைந்துள்ளது. இது அவர்களின் நீண்டகால அனுபவத்தையும், முறையான தகுதிகளையும் புறக்கணிக்கும் செயலாகும்.

NCTE-யின் தெளிவற்ற அறிவிப்புகள்

தேசிய கல்வி ஆசிரியர் கவுன்சிலின் (NCTE) 2011 அறிவிப்பு, கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டம் (RTE Act, 2009) பிரிவு 23-ஐ அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயித்தது. ஆனால், 2011-க்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு TET கட்டாயமா என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை. புதிய நியமனங்களுக்கு மட்டுமே TET கட்டாயமாக்கப்பட்டது, ஆனால் முன்பணியாற்றியவர்களுக்கு இது முன்தேதியிட்டு (retrospectively) பயன்படுத்தப்படவில்லை. இந்தத் தெளிவின்மை, மாநில அரசுகளுக்கும் ஆசிரியர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது, இறுதியில் 2025-ல் TET-ஐ கட்டாயமாக்கும் முடிவுக்கு வழிவகுத்தது, இது ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை அச்சுறுத்துகிறது.

சட்டரீதியான குறைபாடுகள்

RTE சட்டம், 2009-ன் பிரிவு 23(1) ஆசிரியர்களின் குறைந்தபட்ச தகுதிகளை வரையறுக்கிறது, ஆனால் பிரிவு 23(2) ஏற்கெனவே பணியில் உள்ளவர்கள் TET எழுத வேண்டும் எனக் கட்டளையிடவில்லை. இவர்களுக்கு 2015 வரை தகுதி பெற அவகாசம் வழங்கப்பட்டது. NCTE-யின் 2011 அறிவிப்பு, புதிய நியமனங்களுக்கு மட்டுமே TET-ஐ கட்டாயமாக்கியது. 2011-க்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு இதனை முன்தேதியிட்டு பயன்படுத்துவது சட்டபூர்வமற்றது மற்றும் நியாயமற்றது. NCTE இந்த விஷயத்தில் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கத் தவறியது, ஆசிரியர்களுக்கு குழப்பத்தையும் அநீதியையும் ஏற்படுத்தியது.

செயல்முறைகளின் பற்றாக்குறை 

NCTE, 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி மேம்பாட்டிற்கு மாற்று வழிகளை வகுக்கவில்லை. RTE சட்டம் 2015 வரை அவகாசம் வழங்கிய போதிலும், TET-க்கு மாற்றாக பயிற்சித் திட்டங்கள், தொழில்முறை மேம்பாட்டு படிப்புகள் அல்லது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடு முறைகள் அறிமுகப்படுத்தப்படவில்லை. TET தேர்வு நடத்துவது, ஆசிரியர்களைத் தயார்படுத்துவது அல்லது உதவி வழங்குவது குறித்து எவ்வித வழிகாட்டுதலும் இல்லை. இதனால், அனுபவமிக்க ஆசிரியர்கள் தங்கள் தகுதியை மீண்டும் நிரூபிக்க வேண்டிய நியாயமற்ற சுமைக்கு உள்ளாகினர்.

2011-க்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு TET பொருந்தாது

2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் பொருந்தாது என்பதற்கு பின்வரும் காரணங்கள் உள்ளன: 

-NCTE 2011-ன் நோக்கம்: TET, புதிய நியமனங்களுக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்டது. 2011-க்கு முன் நியமிக்கப்பட்டவர்கள், அப்போதைய மாநில விதிகளின்படி முறையான கல்வித் தகுதிகளுடனும், B.Ed, D.T.Ed போன்ற பயிற்சிகளுடனும் பணியில் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு முன்தேதியிட்டு TET திணிப்பது, NCTE அறிவிப்பின் அசல் நோக்கத்திற்கு முரணானது. 

- RTE சட்டத்தின் வரம்பு: பிரிவு 23(2), 2011-க்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு 2015 வரை தகுதி பெற அவகாசம் வழங்கியது, ஆனால் TET குறிப்பாகக் கட்டாயமாக்கப்படவில்லை. 

- அனுபவத்தின் மதிப்பு: பல ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் உள்ள ஆசிரியர்களின் திறமை, TET தேர்வை விட மதிப்புமிக்கது. NCTE, இந்த அனுபவத்தை மதிப்பிட மாற்று முறைகளை வகுக்கவில்லை. 

- அரசியலமைப்பு உரிமைகள்: TET-ஐ முன்தேதியிட்டு கட்டாயமாக்குவது, சமத்துவ உரிமை (பிரிவு 14), பணி வாய்ப்பு (பிரிவு 16), தொழில் சுதந்திரம் (பிரிவு 19(1)(g)), சொத்து உரிமை (பிரிவு 300A), மற்றும் சேவை விதிகள் (பிரிவு 309) ஆகியவற்றை மீறுகிறது. NCTE, இந்த உரிமைகளை மதிக்கும் விதிகளை உருவாக்கத் தவறியது. 

- பணி பாதுகாப்பு: NCTE 2011, இந்த ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை அச்சுறுத்தவில்லை. ஆனால், 2025 தீர்ப்பு, TET தேர்ச்சி பெறாவிட்டால் கட்டாய ஓய்வு எனக் கூறுவது, NCTE-யின் அறிவிப்புக்கு முரணாக உள்ளது.

UGC மற்றும் NCTE அங்கீகாரம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அநீதி

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் NCTE ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பயின்று, முறையான போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், 2011-க்கு முன் தங்கள் தகுதியை ஏற்கெனவே நிரூபித்தவர்கள். இவர்கள், B.Ed, D.T.Ed போன்ற பயிற்சிகளை முடித்து, அப்போதைய மாநில விதிகளின்படி பணியில் சேர்ந்தனர். TET-ஐ கட்டாயமாக்குவது, அவர்களின் முறையான தகுதிகளையும், அனுபவத்தையும் புறக்கணிக்கும் மிகப்பெரிய அநீதியாகும். 

- நியாயமற்ற மறு மதிப்பீடு: UGC மற்றும் NCTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயின்று, முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்கள் தகுதியை மீண்டும் TET மூலம் நிரூபிக்க வேண்டிய நிலை, அவர்களின் முந்தைய சாதனைகளை கேலிக்கு உட்படுத்துகிறது. 

- வாழ்வாதார அச்சுறுத்தல்: இந்த முடிவு, பணி இழப்பு அச்சத்தை ஏற்படுத்தி, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1,50,000 ஆசிரியர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

UGC மற்றும் NCTE-யின் அரசியலமைப்பு அடிப்படை

UGC மற்றும் NCTE ஆகியவை இந்திய அரசியலமைப்பின் கீழ் இயங்கும் சட்டப்பூர்வ அமைப்புகளாகும்: 

- பிரிவு 246 (பொதுப்பட்டியல்): கல்வி, அரசியலமைப்பின் ஏழாவது பட்டியலில் உள்ள பொதுப்பட்டியலில் (List III) வருகிறது. இதன்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. UGC, 1956-ஆம் ஆண்டு UGC சட்டத்தின் கீழ், மற்றும் NCTE, 1993-ஆம் ஆண்டு NCTE சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு, கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சியை ஒழுங்குபடுத்துகின்றன. 

- பிரிவு 73: மத்திய அரசின் நிர்வாக அதிகாரம், பொதுப்பட்டியல் விஷயங்களுக்கு பொருந்தும், இதன்படி UGC மற்றும் NCTE ஆகியவை கல்வி நிறுவனங்களுக்கும் ஆசிரியர் தகுதிகளுக்கும் தரநிர்ணயம் செய்ய அதிகாரம் பெறுகின்றன. 

- பிரிவு 254: பொதுப்பட்டியலில் மத்திய மற்றும் மாநில சட்டங்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டால், மத்திய சட்டம் மேலோங்கும். NCTE-யின் 2011 அறிவிப்பு, மாநில விதிகளை மீறி செயல்படுத்தப்படலாம், ஆனால் இது தெளிவாகவும், அரசியலமைப்பு உரிமைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். 

இந்த அரசியலமைப்பு பிரிவுகளின் கீழ் இயங்கும் NCTE, 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET-ஐ முன்தேதியிட்டு திணிக்காமல், அவர்களின் உரிமைகளை மதிக்கும் விதிகளை வகுத்திருக்க வேண்டும். TET-ஐ கட்டாயமாக்குவது, சமத்துவ உரிமை (பிரிவு 14), பணி வாய்ப்பு (பிரிவு 16), தொழில் சுதந்திரம் (பிரிவு 19(1)(g)), சொத்து உரிமை (பிரிவு 300A), மற்றும் சேவை விதிகள் (பிரிவு 309) ஆகியவற்றை மீறுகிறது.

கல்விக் கொள்கையும் மாநில உரிமைகளும்

கல்வி, அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் (List III) உள்ளதால், மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் மாநிலங்களின் சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் அப்போது பரிகாசிக்கப்பட்டனர். ஆனால், இன்று ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, மாநில அரசு சமூக நீதி அடிப்படையில் உறுதியாக செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. NCTE-யின் தெளிவற்ற வழிகாட்டுதல்கள், மாநில அரசுகளின் உரிமைகளை பாதித்து, மத்தியக் கொள்கைகளை திணிக்க வழிவகுத்தன.

அரசின் பொறுப்பு

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், சட்ட வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர் அமைப்புகளுடன் ஆலோசித்து, பணி தொடர்ச்சி மற்றும் பதவி உயர்வுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத தெளிவான தீர்வை வகுப்பார் என நம்பிக்கை உள்ளது. மாநில அரசு, ஆசிரியர்களின் நலனை முதன்மைப்படுத்தி, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, NCTE-யின் அறிவிப்புகளுக்கு உரிய சட்ட ஆலோசனைகளையும், மாற்று நடைமுறைகளையும் வகுக்க எப்போதும் தயாராக உள்ளது என்று அதன் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Embed widget