மேலும் அறிய

Teachers Day 2022: சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளே ஆசிரியர் தினம்; யார் இவர்? பெருமையை அறியுங்கள்..

அந்த ஆண்டு அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவரது நண்பர்கள் மற்றும் அவரிடம் பயின்ற மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

தலைசிறந்த ஆசிரியரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளே ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகின்றன. 

ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஏன் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது? 

மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றி, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரின் பணிகளைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

யார் இந்த ராதாகிருஷ்ணன்? | Who is Sarvepalli Radhakrishnan?

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி அப்போதைய பிரிக்கப்படாத திருத்தணி நகரத்தில் பிறந்தவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் ராதாகிருஷ்ணன். தனது இளமைக் காலத்தை திருத்தணியிலும் திருப்பதியிலும் கழித்தார். 

தன்னுடைய ஆரம்பக் கல்வியை திருவள்ளூரில் உள்ள கௌடி பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியைத் திருப்பதியில் உள்ள லூர்தன் மிஷன் பள்ளியிலும், கல்லூரிப்படிப்பை வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியிலும் முடித்தார். பின்னர், பாரம்பரியம் வாய்ந்த சென்னைப் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்தார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் உதவி பேராசிரிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1918ம் ஆண்டு மைசூர் பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராகவும் பொறுப்பு வகித்தார். இதையடுத்து, 1921ம் ஆண்டு கொல்கத்தா பல்கலைகழகத்திலும் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்ற பரிந்துரைக்கப்பட்டார்.

வாரணாசி போன்ற இடங்களிலும் தொடர்ந்து நீண்ட காலம் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். தத்துவவியலில் நிபுணத்துவம் பெற்ற ராதாகிருஷ்ணன் எழுதிய “இந்திய தத்துவம்” என்ற புத்தகம் 1923ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றது.

1952ம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அவரது கல்விச் சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு 1954ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி அவரை கவுரவித்தது. பின்னர், நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 1962ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்.


Teachers Day 2022: சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளே ஆசிரியர் தினம்; யார் இவர்? பெருமையை அறியுங்கள்..

ஆசிரியர் தினம் பிறந்தது எப்படி?

ராதாகிருஷ்ணன் 1962ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார். அந்த ஆண்டு அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவரது நண்பர்கள் மற்றும் அவரிடம் பயின்ற மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், தனது பிறந்தநாளை தனித்தனியாகக் கொண்டாடுவதற்கு பதிலாக, செப்டம்பர் 5-ம் தேதியை இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும்  மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தினமாகக் கடைப்பிடித்தால் அது தனது பாக்கியமாகவும், பெருமையாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று, அந்த ஆண்டு முதல் நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Impact Makers Conclave LIVE: தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் சாமானியனை பாதிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
Impact Makers Conclave LIVE: தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் சாமானியனை பாதிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Impact Makers Conclave LIVE: தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் சாமானியனை பாதிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
Impact Makers Conclave LIVE: தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் சாமானியனை பாதிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
UN Job Cuts: இதென்னடா ஐ.நாவிற்கு வந்த சோதனை - கம்பி நீட்டிய ட்ரம்ப், 7000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு
UN Job Cuts: இதென்னடா ஐ.நாவிற்கு வந்த சோதனை - கம்பி நீட்டிய ட்ரம்ப், 7000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு
Viral Video: ”தண்ணீர் பாட்டில் தூக்குற பையன் தானே!” இளம் வீரரை அவமதித்த கோலி? பொங்கிய நெட்டிசன்ஸ்
Viral Video: ”தண்ணீர் பாட்டில் தூக்குற பையன் தானே!” இளம் வீரரை அவமதித்த கோலி? பொங்கிய நெட்டிசன்ஸ்
Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
Embed widget