மேலும் அறிய

School Reopen: குழந்தைகளே ரெடியாகுங்க! முடிந்தது அரையாண்டு தேர்வு விடுமுறை: இன்று பள்ளிகள் திறப்பு..!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அன்று அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்றது. 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிசம்பர் 19ம் தேதி  தொடங்கிய தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற்றது.  மொத்தமாக 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்ற நிலையில், 6, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடந்து முடிந்தது.

பள்ளிகள் இன்று திறப்பு:

அதைதொடர்ந்து, கடந்த 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில்,  9 நாட்கள் அரையாண்டு விடுமுறை நிறைவடைந்த நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு இயங்கப்பட உள்ளன. அதேநேரம், 1  முதல் 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வரும் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம் நடைபெறவுள்ளதால் விடுமுறை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை:

முன்னதாக, அரையாண்டு விடுமுறையில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று புகார் எழுந்தது. இதனால், அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. பொதுத் தேர்வுகளை எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் அசைன்மென்ட்டுகளை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முறை:

2022- 2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற்றது. அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக வினாத் தாள்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக தேர்வு நாட்களுக்குரிய வினாத் தாள்களை பெற தங்கள் பள்ளி சார்பாக ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவ்விவரத்தினை சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப் பள்ளித் தலைமையாசிரியருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தனர். கடந்த காலாண்டுத் தேர்வில் பள்ளிகளே வினாத் தாள்களைத் தயாரித்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த முறை அரையாண்டுத் தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படை பின்பற்றப்பட்டது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்.. 8  பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் கோர விபத்தி
நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்.. 8 பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் கோர விபத்தி
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்.. 8  பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் கோர விபத்தி
நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்.. 8 பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் கோர விபத்தி
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
US Suspends Visa: ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
Embed widget