மேலும் அறிய

அரசுப்பள்ளிகளை தத்தெடுக்கிறோமா? பெருந்தன்மையை கொச்சைப்‌படுத்துவதா? தனியார் பள்ளிகள் சங்கம் கேள்வி!

அரசு பள்ளிகளை தத்தெடுக்கப் போகிறோம் என்று எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை, அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளும் அதுபோன்று எதுவும் கூறவில்லை என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

சொல்லப்படாத ஒரு வார்த்தையை அரசியலாக்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

முன்னதாக அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தத்துக் கொடுப்பதா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து இருந்தது.

அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து கட்டமைப்பு வசதிகளா?

குறிப்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ’’அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதன் நோக்கம் படிப்படியாக அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும். அரசுப்பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூறி இருந்தது.

இந்த நிலையில், இதற்கு தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

’’அரசு பள்ளிகளின்‌ வளர்ச்சியில்‌ CSR  மூலம்‌ தனியார்‌ பள்ளிகளின்‌ பங்களிப்பு இருக்கும்‌ என்றுதான்‌ சொன்னோம்‌.

தமிழ்நாட்டிலுள்ள 13,000-க்கும்‌ மேற்பட்ட தனியார்‌ பள்ளிகள்‌, மழலையர்‌ துவக்கப்‌ பள்ளிகள்‌, மெட்ரிகுலேஷன்‌ பள்ளிகள்‌, மெட்ரிகுலேஷன்‌ மேல்நிலைப்‌ பள்ளிகள்‌, சிபிஎஸ்‌இ உள்ளிட்ட இதரவாரிய பள்ளிகள்‌ என ஒட்டுமொத்த பள்ளிகளுக்கும்‌ பல்வேறு சங்கங்கள்‌ இயங்கி வந்தன. அந்த சங்கங்களை எல்லாம்‌ ஒருங்கிணைந்து பெரும்பான்மையான சங்கங்கள்‌ ஒன்றுகூடி தமிழ்நாடு தனியார்‌ பள்ளிகள்‌ சங்கம்‌ என்ற பெயரில்‌ ஒரு புதிய ஒரு சங்கத்தை உருவாக்கி அந்த சங்கத்தின்‌ துவக்க விழாவிற்கு பள்ளிக்‌ கல்வித்துறை அரசு செயலாளர்‌, தனியார்‌ பள்ளி இயக்குநர்‌, தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ பள்ளிக்‌ கல்வித்துறை அமைச்சரை வாழ்த்துரை வழங்கவும்‌ விழாவினை துவக்கி வைக்கவும்‌ அழைத்தோம்‌. அவர்கள்‌ அனைவரும்‌ வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்கள்‌.

அரசு பள்ளிகளில்‌ பயின்ற நாங்கள்‌தான்‌

அரசு பள்ளிகளில்‌ பயின்ற நாங்கள்‌தான்‌ தனியார்‌ பள்ளிகளை நடத்தி வருகிறோம்‌. நாம்‌ அரசுப் பள்ளிகளுக்கு எந்த விதத்திலாவது பயன்பாடாக இருக்க வேண்டும்‌ என்ற உயரிய எண்ணத்தின்‌ அடிப்படையில்‌ அந்த நிகழ்வின்‌போது பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிய அதே தருணத்தில்‌ வரும்‌ கல்வியாண்டில்‌ 500 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அருகாமையில் இருக்கிற தனியார்‌ பள்ளிகள்‌ அந்த பள்ளிகளில்‌ பயில்கிற மாணவர்களின்‌ கல்வி வளர்ச்சிக்கு உதவிடம்‌ வகையிலே நூலகங்கள்‌, பள்ளிக்கு வர்ணம்‌ பூசுதல்‌, பள்ளி விளையாட்டு மைதானங்களை  சுத்தப்படுத்துதல், தூய்மைப்‌படுத்துதல்‌ விளையாட்டு உபகரணப்‌ பொருட்களை வாங்கிக்‌ கொடுத்தல்‌, மாணவர்களுக்குத்‌ தேவையான இதர பொது அறிவு வளர்ச்சிக்கான புத்தகங்கள்‌ வாங்கிக்‌கொடுத்தல்‌, அதற்கான பொருட்கள்‌ வாங்கிக்‌ கொடுத்தல்‌, கணிணி உள்ளிட்ட கண்டுபிடிப்புகள்‌ சம்பந்தப்பட்ட நவீன பொருட்களை வாங்கிக்‌ கொடுத்தல்‌ என்று பல்வேறு வகையிலே உதவிட வேண்டும்‌ என்ற நோக்கத்தின்‌ அடிப்படையில்‌ மாணவர்களின்‌ வளர்ச்சிக்காக அரசு பள்ளிகளின்‌ உட்கட்டமைப்பை மேம்படுத்த 57% மூலம்‌ தனியார்‌ பள்ளிகளின்‌ பங்களிப்பு இருக்கும்‌ என்றுதான்‌ சொல்லப்பட்டதே தவிர எந்த இடத்திலும்‌ அரசு பள்ளிகளை தத்தெடுப்போம்‌ என்று நாங்களும்‌ சொல்லவில்லை. அமைச்சர்‌ உள்ளிட்ட அதிகாரிகள்‌ யாரும்‌ சொல்லவில்லை.

பெருந்தன்மையை கொச்சைப்‌படுத்துவதா?

சொல்லப்படாத ஒரு வார்த்தையை அரசியலாக்கி தனியார்‌ பள்ளிகள்‌ அரசு பள்ளிகளை தத்தெடுக்கிறதா? என்று கேட்பது உண்மையாகவே 500 பள்ளிகளுக்கு உதவத் தயாராக உள்ளோம்‌ என்று சொன்ன தனியார்‌ பள்ளி தாளாளர்களுடைய அந்தப்‌ பெருந்தன்மையை கொச்சைப்‌ படுத்துவதாக உள்ளது. ஆகவே தயவுகூர்ந்து இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்‌.

எந்த இடத்திலும்‌ தத்தெடுக்கப்படும்‌ என்ற வார்த்தை யாராலும்‌ உபயோகப்படுத்தப்படவில்லை. அரசு பள்ளிகளின்‌ வளர்ச்சிக்கு தனியார்‌ பள்ளிகள்‌ சிஎஸ்ஆர் மூலம்‌ பங்களிப்பார்கள்‌ உதவுவார்கள்‌ என்றுதான்‌ சொல்லப்பட்டதே தவிர தத்தெடுக்கும்‌ என்ற வார்த்தை இல்லை.

மேலும்‌ 500 அரசு பள்ளிகளின்‌ உட்கட்டமைப்பு மற்றும்‌ மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்க முன்வந்துள்ள தனியார்‌ பள்ளிகளுக்கு பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகம்‌ முழு ஆதரவும்‌ நன்றியும்‌ தெரிவித்துள்ளதை இங்கே‌ தெரிவித்து கொள்கிறோம்‌’’.

இவ்வாறு தமிழக தனியார் பள்ளிகள் சங்கம தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
"தொட்டுப் பார்க்க முடியாது.. நான் ரவுடிக்கு ரவுடி.." முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைப் பேச்சு
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
Embed widget