மேலும் அறிய

கிடுகிடுன்னு உயர்கிறது... ஒரே நாளில் 40 மாணவர்கள் சேர்க்கை: என்ன தெரியுங்களா?

பாடப்புத்தகங்கள், காலை டிபன், மதிய உணவு, சீருடை, கல்வி உதவித் தொகை, சைக்கிள் என்று பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வித்தரத்திலும் அரசு பள்ளிகள் தற்போது முன்னிலை வகித்து வருகின்றன.

புதுக்கோட்டை: பரபரக்கிறது மாணவர்கள் சேர்க்கை... கிடுகிடுவென உயர்கிறது எண்ணிக்கை என புதுக்கோட்டை அரசுப் பள்ளியில் ஒரு ஆச்சர்யம் நடந்துள்ளது. அட ஆமாங்க. ஒரே நாளில் 40 மாணவர்கள் சேர்ந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று ஒரே நாளில் 40 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். தமிழகம் முழுவதும் வரும் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று, தமிழக அரசின் திட்டங்கள், சலுகைகளை விளக்கி மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி, துண்டறிக்கை விநியோகம், பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் சலுகைகள் அறிவித்தல் மூலமாகவும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று ஒரே நாளில் மாணவ- மாணவிகள் 40 பேர் புதிதாக சேர்ந்தனர். இவர்களை மாவட்ட கலெக்டர் எம்.அருணா வரவேற்றார். மேலும், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பலூன் வழங்கி, கிரீடம் அணிவிக்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, புதுக்கோட்டை போஸ் நகர் அரசு நடுநிலைப்பள்ளி, ராஜகோபாலபுரம் அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் நேற்று தலா 5 பேர் புதிதாக சேர்ந்தனர். அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் வெகுவாக மும்முரம் காட்டி வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒன்றரை லட்சத்தை நெருங்குகிறது. பொதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜுன் மாதத்தில் தொடங்கும். அதே நேரத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில் மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிடும்.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியது. அந்தவகையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதியே தொடங்கியது. முதல் 5 நாளிலேயே மாணவர் சேர்க்கை 34 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 995 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையின்படி பார்த்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12,309 பேரும், சேலம் மாவட்டத்தில் 11,595 பேரும் சேர்க்கை பெற்றுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் வழங்கப்படும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டையும் பொதுமக்களிடையே எடுத்துச்சொல்லி மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த முயற்சி வெற்றிகரமாக மாறியுள்ளதற்கு அரசு பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையே உதாரணம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதத்திலும் கிடைக்கும் பல்வேறு திட்டங்கள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தாண்டு அரசு பள்ளிகளில் 10 லட்சம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று கல்வித்துறை முடிவு செய்து இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாடப்புத்தகங்கள், காலை டிபன், மதிய உணவு, சீருடை, கல்வி உதவித் தொகை, சைக்கிள் என்று பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வித்தரத்திலும் அரசு பள்ளிகள் தற்போது முன்னிலை வகித்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
சமூகத்தின் இருண்ட பக்கத்தை பேசுகிறது மாரீசன்...புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்
சமூகத்தின் இருண்ட பக்கத்தை பேசுகிறது மாரீசன்...புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்
New Vice President: புதிய குடியரசு துணை தலைவர் யார்? போட்டியாளர்கள் இதை செஞ்சா தான்.. பாஜக டிமேண்ட்
New Vice President: புதிய குடியரசு துணை தலைவர் யார்? போட்டியாளர்கள் இதை செஞ்சா தான்.. பாஜக டிமேண்ட்
TN weather Reoprt: விடாது கருப்பாய் கொட்டும் மழை, இன்று எங்கெல்லாம் ரெட் அலெர்ட் - சென்னை வானிலை நிலவரம்
TN weather Reoprt: விடாது கருப்பாய் கொட்டும் மழை, இன்று எங்கெல்லாம் ரெட் அலெர்ட் - சென்னை வானிலை நிலவரம்
Rishabh Pant: ரிஷப் பண்டிற்கு என்ன ஆச்சு..! வீங்கிய வலது கால் பாதம், சீரிஸ் கதை முடிஞ்சதா? பிசிசிஐ அப்டேட்
Rishabh Pant: ரிஷப் பண்டிற்கு என்ன ஆச்சு..! வீங்கிய வலது கால் பாதம், சீரிஸ் கதை முடிஞ்சதா? பிசிசிஐ அப்டேட்
Embed widget