மேலும் அறிய

கிடுகிடுன்னு உயர்கிறது... ஒரே நாளில் 40 மாணவர்கள் சேர்க்கை: என்ன தெரியுங்களா?

பாடப்புத்தகங்கள், காலை டிபன், மதிய உணவு, சீருடை, கல்வி உதவித் தொகை, சைக்கிள் என்று பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வித்தரத்திலும் அரசு பள்ளிகள் தற்போது முன்னிலை வகித்து வருகின்றன.

புதுக்கோட்டை: பரபரக்கிறது மாணவர்கள் சேர்க்கை... கிடுகிடுவென உயர்கிறது எண்ணிக்கை என புதுக்கோட்டை அரசுப் பள்ளியில் ஒரு ஆச்சர்யம் நடந்துள்ளது. அட ஆமாங்க. ஒரே நாளில் 40 மாணவர்கள் சேர்ந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று ஒரே நாளில் 40 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். தமிழகம் முழுவதும் வரும் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று, தமிழக அரசின் திட்டங்கள், சலுகைகளை விளக்கி மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி, துண்டறிக்கை விநியோகம், பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் சலுகைகள் அறிவித்தல் மூலமாகவும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று ஒரே நாளில் மாணவ- மாணவிகள் 40 பேர் புதிதாக சேர்ந்தனர். இவர்களை மாவட்ட கலெக்டர் எம்.அருணா வரவேற்றார். மேலும், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பலூன் வழங்கி, கிரீடம் அணிவிக்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, புதுக்கோட்டை போஸ் நகர் அரசு நடுநிலைப்பள்ளி, ராஜகோபாலபுரம் அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் நேற்று தலா 5 பேர் புதிதாக சேர்ந்தனர். அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் வெகுவாக மும்முரம் காட்டி வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒன்றரை லட்சத்தை நெருங்குகிறது. பொதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜுன் மாதத்தில் தொடங்கும். அதே நேரத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில் மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிடும்.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியது. அந்தவகையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதியே தொடங்கியது. முதல் 5 நாளிலேயே மாணவர் சேர்க்கை 34 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 995 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையின்படி பார்த்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12,309 பேரும், சேலம் மாவட்டத்தில் 11,595 பேரும் சேர்க்கை பெற்றுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் வழங்கப்படும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டையும் பொதுமக்களிடையே எடுத்துச்சொல்லி மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த முயற்சி வெற்றிகரமாக மாறியுள்ளதற்கு அரசு பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையே உதாரணம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதத்திலும் கிடைக்கும் பல்வேறு திட்டங்கள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தாண்டு அரசு பள்ளிகளில் 10 லட்சம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று கல்வித்துறை முடிவு செய்து இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாடப்புத்தகங்கள், காலை டிபன், மதிய உணவு, சீருடை, கல்வி உதவித் தொகை, சைக்கிள் என்று பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வித்தரத்திலும் அரசு பள்ளிகள் தற்போது முன்னிலை வகித்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

NEET UG: 2027 முதல் கணினி மூலமே நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவல் சொன்ன என்டிஏ
NEET UG: 2027 முதல் கணினி மூலமே நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவல் சொன்ன என்டிஏ
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; வெளிப்படைத்தன்மை இல்லையா? முழு விசாரணை தேவை
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; வெளிப்படைத்தன்மை இல்லையா? முழு விசாரணை தேவை
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN RAIN ALERT: அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
MK Stalin: மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக மாறி நிற்கும் இடைத்தேர்தல்! வெற்றி பெற தீயாய் வேலை செய்யும் திமுக! ஜெயிக்குமா?
MK Stalin: மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக மாறி நிற்கும் இடைத்தேர்தல்! வெற்றி பெற தீயாய் வேலை செய்யும் திமுக! ஜெயிக்குமா?
IPL 2026 Final RCB vs GT: ஐபிஎல் பட்டம் யாருக்கு? கோப்பையை எடுத்து வைக்கச் சொல்லும் ஆர்சிபி - குஜராத்! இன்னும் சற்று நேரத்தில் குஸ்தி!
IPL 2026 Final RCB vs GT: ஐபிஎல் பட்டம் யாருக்கு? கோப்பையை எடுத்து வைக்கச் சொல்லும் ஆர்சிபி - குஜராத்! இன்னும் சற்று நேரத்தில் குஸ்தி!
Trump Threatens Iran: ''நீங்கள் நிலைகுலையப் போகிறீர்கள்“; ஏஐ புகைப்படத்துடன் எச்சரிக்கை செய்த ட்ரம்ப்; மீண்டும் போர்.?
''நீங்கள் நிலைகுலையப் போகிறீர்கள்“; ஏஐ புகைப்படத்துடன் எச்சரிக்கை செய்த ட்ரம்ப்; மீண்டும் போர்.?
Premalatha TVK Cabinet : துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
ADMK Vs TVK: விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை - பகீர் உண்மைகள்
விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை- பகீர் உண்மைகள்
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர்... விடுதி உணவு விவகாரத்தில் அதிரடி உத்தரவு...
மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர்... விடுதி உணவு விவகாரத்தில் அதிரடி உத்தரவு...
Embed widget