மேலும் அறிய

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு... ரிஸ்க் எடுக்கும் தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் 1 முதல் 12 ஆம் வகுப்புக்குள் பயிலும் மாணவ மாணவிகள் இருப்பார்கள். இந்த மாணவர்களுக்கு வீட்டிலிருந்தோ அல்லது வீட்டிலிருந்து மாணவர்களுக்கோ கொரோனா தொற்று பரவுமானால்...

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு செல்வது தடைப்பட்டு உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வகுப்பை நடத்தி வருகின்றனர். ஆனால் ஏழை எளிய மாணவர்கள், கிராமபுற, மழைவாழ் பகுதி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியும் கிடைப்பது இல்லை.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கின. ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே அடுத்தடுத்து மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். வெளியிலும் மக்கள் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காத சூழலில் பள்ளிகளில் மாணவர்களால் எப்படி அதை கடைபிடிக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.

இதனிடையே, நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் 1,500 க்கும் கீழ் செல்லாத சூழலில் இந்த மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது தேவைதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு... ரிஸ்க் எடுக்கும் தமிழ்நாடு அரசு!

அலுவலகங்கள், வணிகத் தலங்களில் பெரியவர்களே முறையாக கொரோனா விதிகளை கடைப்பிடிக்காமல், கும்பலாக பலருக்கு கொரோனா பரவும் நிலையில், விபரம் அறியாத 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களால் எப்படி முறையாக கொரோனா விதிகளை கடைபிடிக்க முடியும் என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வந்தாலும், பெரும்பகுதியினருக்கு இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது. அதுவும் குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவே இல்லை. அதே போல் கொரோனா 3 வது அலை அக்டோபர் மாதம் இந்தியாவை தாக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். ஒருவேளை 3 வது அலை தாக்கினால் அதில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்து உள்ளனர்.

இத்தகைய சூழலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் 1 முதல் 12 ஆம் வகுப்புக்குள் பயிலும் மாணவ மாணவிகள் இருப்பார்கள். இந்த மாணவர்களுக்கு வீட்டிலிருந்தோ அல்லது வீட்டிலிருந்து மாணவர்களுக்கோ கொரோனா தொற்று பரவுமானால் அது மிகப்பெரிய சமூக பரவலுக்கு வித்திடும் அபாயம் இருக்கிறது.

அதே போல், 90 சதவீத குழந்தைகளுக்கு கொரோனா பரவலுக்கான அறிகுறிகள் தென்படுவது இல்லை. எனவே கொரோனா தொற்று ஏற்பட்டாலும், 90 சதவீதம் பேரால் அதை உடனடியாக கண்டறிய முடியாது. எனவே அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் கொரோனா பரவும் என்ற அச்சமும் இங்கு எழுகிறது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget