மேலும் அறிய

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ்: ஆயிரக்கணக்கில் காலிப் பணியிடங்கள்! நிர்வாகத்தில் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்!

ஆயிரக்கணக்கில் காலியிடங்கள்; ஐந்தில் ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடம் வேகண்ட்- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவின் மிக உயரிய குடிமைப் பணிகளாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் ஆகிய துறைகளில் நாடு முழுவதும் 2,800-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ் மாநிலங்களவையில் இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:

காலியிடங்களின் முழு விவரம்

மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 6,858 ஆகும். ஆனால், தற்போது 5,457 அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் 1,401 ஐஏஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் சுமார் 20.4 சதவீதமாகும். அதாவது, ஐந்தில் ஒரு ஐஏஎஸ் பணியிடம் காலியாக உள்ளது.

இதேபோல, இந்தியக் காவல் பணியான ஐபிஎஸ் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 4,984 இடங்களில், 4,100 அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் 884 இடங்கள் (17.7%) காலியாக உள்ளன. இந்திய வனப் பணியான ஐஎஃப்எஸ் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 3,193 இடங்களில், 549 இடங்கள் (17.2%) நிரப்பப்படாமல் உள்ளன.

மாநில வாரியான நிலவரம்

மாநில வாரியாகப் பார்க்கும்போது, அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 'அக்முட்' (AGMUT) கேடரில்தான் அதிகபட்சமாக 267 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு அடுத்தபடியாக, உத்தரப் பிரதேசத்தில் 215 முக்கிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தத் தகவல்கள் மாநிலங்களுக்கிடையே அதிகாரிகளின் நியமனத்தில் உள்ள சமச்சீரற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன.

என்ன காரணங்கள்?

ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும், பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதற்கு ஓய்வு பெறுதல் (Retirement), பதவி உயர்வு, பணி விலகல் மற்றும் காலத்திற்கு ஏற்ப அதிகரிக்கப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

எந்தெந்த துறைகளில் காலி இடங்கள்?

சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கியத் துறைகளில் இது போன்ற உயரிய பதவிகள் காலியாக இருப்பது நிர்வாகத் திறனை பாதிக்கும் என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறையைச் சரிசெய்ய, ஆள்சேர்ப்பு செயல்முறைகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு போலி சான்றிதழா? 15 மாணவர்களுக்கு நோட்டீஸ்
புதுச்சேரி எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு போலி சான்றிதழா? 15 மாணவர்களுக்கு நோட்டீஸ்
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!
புதுச்சேரி CENTAC Non-NEET: இளநிலை சேர்க்கைக்கு புதிய விருப்பப் பதிவு! காலியிடங்கள், கடைசி தேதி அறிவிப்பு !
புதுச்சேரி CENTAC Non-NEET: இளநிலை சேர்க்கைக்கு புதிய விருப்பப் பதிவு! காலியிடங்கள், கடைசி தேதி அறிவிப்பு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget