மேலும் அறிய

Jacto Geo: மீண்டும் பழைய ஓய்வூதியம்; மாநிலம் முழுவதும் நாளை ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

மீண்டும் பழைய ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜாக்டோ - ஜியோ அமைப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. 

மீண்டும் பழைய ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜாக்டோ - ஜியோ அமைப்பு நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது. 

இதுகுறித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பு தெரிவித்து உள்ளதாவது:

’’தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ 2017 ஆண்டு தொடங்கப்பட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காக, முந்தைய ஆட்சியாளர்களின் வெறி அடக்குமுறைகளை எதிர்கொண்டு, தொடர்ச்சியாக போராட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, 2021-ல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- பணியாளர்களின் ஆதரவோடு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி அமைந்து, ஆசிரியர்கள், அரசு எழியர்கள் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் எங்களது அடிப்படை உரிமையான அக விலைப்படி என்பதே மறுக்கப்படக் கூடிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளோம். 

மேலும், ஈட்டிய விடுப்பினை சரண் செய்து, பணப் பயன் பெறக்கூடிய உரிமை என்பது கால வரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதோடு 1-4-2003க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்டார். எதிர்பார்ப்போடு ஏறத்தாழ ஒரு இலட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் கலந்துகொண்ட இந்த வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில், தமிழக முதலமைச்சர் எந்த ஒரு அறிவிப்பினையும் வெளியிடாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

இதன் தொடர்ச்சியாக, ஜாக்டோ ஜியோ வாழ்வாதார கோரிக்கைகளை வென்றெடுக்கும் முனைப்பாக இயக்க நடவடிக்கைகளை நடத்துவதென திட்டமிட்டு, செயலாற்றி வருகிறோம்.

19.02.2023 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாவட்ட மாநாடு

5.3.2023 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்

24.3.2023 அன்று 20,000 கிலோ மீட்டர் மனிதச் சங்கிலிப் போராட்டம்.

தமிழக முதலமைச்சர் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து எங்களில் ஒருவராக செயலாற்றியதை இப்போது நினைவு கூர்கிறோம். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென  தமிழக முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம்’’.

இவ்வாறு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பழைய பென்ஷன் திட்டத்தை மீட்டெடுத்தல், நிலுவையில் உள்ள அகவிலைப் படியைப் பெறுதல் மற்றும் சரண் ஒப்படைப்பு உரிமையை மண்டும் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 05.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget