மேலும் அறிய

நவம்பர் 1ல் நர்சரி பள்ளிகள் திறப்பு இல்லை: தமிழக அரசு அறிவிப்பு

நவம்பர் 1ஆம் தேதி நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம், 9,10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.

நவம்பர் 1ஆம் தேதி நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம், 9,10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.

பள்ளிகள் தொடங்கியபோது அங்கும் இங்கும் சில பள்ளிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் கூட பள்ளிகள் மூடப்படவில்லை. குறிப்பிட்ட பள்ளிக்கு மட்டும் ஓரிண்டு நாட்கள் லீவு விட்டு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில் மாணவர்களுக்கு வருகைப் பதிவை கட்டாயம் ஆக்கக் கூடாது என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வரும் 1 ஆம் தேதி முதல் முதலாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நர்சரிப் பள்ளிகளை திறப்பது குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தது. அண்மையில், வெளியான ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசாணையில், நர்சரி பள்ளிகளும் திறக்கப்படுவது போல சேர்த்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நர்சரி பள்ளிகளைத் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளதாகவும், இது தொடர்பான, தெளிவான சுற்றறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து குழப்பத்திற்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார். மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படவில்லை. அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது பற்றி தான் முதல்வருடன் ஆலோசித்தோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், வரும் நவம்பர் ஒன்றாம் தேதி நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 


நவம்பர் 1ல் நர்சரி பள்ளிகள் திறப்பு இல்லை: தமிழக அரசு அறிவிப்பு

இல்லம் தேடி கல்வித் திட்டம்:

கரோனா தொற்று காலத்தில் 1 ஆம் முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தினமும் 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் இல்லம் தேடிக் கல்வி என்னும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

அதேபோல் மாணவர்களின் நலனைக் கருதி அரையாண்டுத் தேர்வு நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் நடத்துவதற்கான வாய்ப்பில்லை. நேரடியாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெறும். அதற்கு முன்னதாக டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget