மேலும் அறிய

UGC புதிய விதிகள்: பொதுப்பிரிவு மாணவர்கள் கவலை, மத்திய அரசின் முக்கிய விளக்கம்! தீர்வு என்ன?

யுஜிசி புதிய விதிகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டும், உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையிலுமே செயல்படுத்தப்படுகின்றன- கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு சமீபத்தில் அறிவித்த 'சமத்துவ விதிமுறைகள் 2026' (UGC Equity Regulations 2026) குறித்து பொதுப்பிரிவு மாணவர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.

யுஜிசி கொண்டு வந்துள்ள சமத்துவ விதிகள், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எதிரானவை என்றும் பொய்ப் புகார் கொடுக்கும் மாணவர்களுக்கு எதிராக அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை இல்லை என்றும் நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு இந்து அமைப்புகள், மாணவர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

யாருக்கும் எந்தவித அநீதியும் இழைக்கப்படாது

இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, "புதிய விதிகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டும், உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையிலுமே செயல்படுத்தப்படுகின்றன.

இந்தச் சட்டத்தின் பிரிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் தேவையில்லை. இந்தச் சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது என்றும், யாருக்கும் எந்தவித அநீதியும் இழைக்கப்படாது என்றும் நான் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

புகார்களைத் தெரிவிக்க தெளிவான வழிமுறைகள் இல்லை

இருப்பினும், இந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 'சவர்ண சேனா' என்ற அமைப்பின் தலைமையில் பொதுப்பிரிவு மாணவர்கள் யுஜிசி தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய விதிமுறைகளில் பொதுப்பிரிவு மாணவர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க தெளிவான வழிமுறைகள் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு தொடர்பான புகார்கள் 2016-17ஆம் ஆண்டில் 173 ஆக இருந்தது, 2023-24ஆம் ஆண்டில் 350-க்கும் மேலாக அதிகரித்துள்ளதாகத் தரவுகளைச் சுட்டிக்காட்டி அவர்கள் கவலை தெரிவித்தனர்.


UGC புதிய விதிகள்: பொதுப்பிரிவு மாணவர்கள் கவலை, மத்திய அரசின் முக்கிய விளக்கம்! தீர்வு என்ன?

எதற்காக புதிய விதிகள்?

ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தத்வி ஆகியோர் உயர் கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியான துன்புறுத்தல்களால் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்களது தாயார்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் இந்த புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) இந்த விதிமுறைகளை ஆதரித்தாலும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பெண்களுக்கான போதிய பிரதிநிதித்துவம் இதில் இல்லை எனவும், பாகுபாடு குறித்த வரையறைகள் தெளிவாக இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

தொடர் எதிர்ப்புகள் மற்றும் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பொதுப்பிரிவு மாணவர்களின் புகார்களையும் விசாரித்துத் தீர்வு காண்பதற்கான புதிய அம்சத்தை விதிகளில் சேர்க்கப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே இதுதொடர்பான வழக்கை, விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget