மேலும் அறிய

NEET UG 2022: நீட் தேர்வில் உள்ளாடையைக் களையச்சொன்ன விவகாரம்: மறுப்பு தெரிவித்து என்டிஏ விளக்கம்

கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளைக் களைய கட்டாயப்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்துள்ளது. 

கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளைக் களைய கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் நீட் தேர்வு மையக் கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்துள்ளது. 

மருத்துவ படிப்புக்கான தகுதி தேர்வான நீட் எக்ஸாம் நேற்று முன்தினம் (ஜூலை 17) நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் ஆயூர் மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டரில் நடந்த நீட் தேர்வில் தேர்வு எழுத வந்த மாணவிகளின் 'பிரா'-க்களை அவிழ்த்துவிட்டு எக்ஸாம் ஹாலுக்கு அனுமதித்தனர். இதனால் மனதளவில் பாதிப்படைந்த மாணவிகள் அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதினர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்லம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் கொல்லம் ரூரல் எஸ்.பி-க்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் கூறுகையில், "தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்தின் கேட்டை கடந்தபோது ஒரு பெண் அதிகாரி மாணவியை அழைத்து ஸ்கேனர் உபயோகித்து பரிசோதனை நடத்தினார். பிராவில் மெட்டல் ஹூக் இருந்ததால் பீப் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளாடையை கழட்டி வெளியே வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மாணவி கதறி அழுதுள்ளார். இதனால் அந்த அதிகாரி, தேர்வு முக்கியமா உன்னுடைய உள்ளாடை முக்கியமா என கேட்டுள்ளார். 

தேர்வு எழுதிய பிறகு உள்ளாடை இல்லாமல் வெளியே போக முடியாமல் மாணவி ஒரு ஓரமாக நின்று அழுவதைக் கண்ட மற்றொரு அதிகாரி அருகில் சென்று விஷயங்களைக் கேட்டுள்ளார். நிலைமையைப் புரிந்துகொண்ட அவர் அந்த மாணவியின் அம்மாவின் போன் நம்பரை வாங்கி செல்போனில் அழைத்து அம்மாவிடம் துப்பட்டாவைக் கொண்டுவரும்படி சொன்னார்.

பின்னர் காரில் போகும்போது  தேர்வு எப்படி எழுதினாய் என அவரின் தாய் கேட்டபோது வெடித்து அழுத மாணவி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகள் உலோகம் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைக் காரணம் காட்டி மாணவியின் உள்ளாடையை அவிழ்க்க வைத்துளனர். இதனால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்றும், தெரிந்த கேள்விகளுக்குக்கூட விடை எழுத முடியாமல் திரும்பி வந்ததாகவும் மாணவி கூறினார். வேறு மாணவிகளுக்கும் இதுபோன்று நடந்ததாக மாணவி கூறினார்" என பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.


NEET UG 2022: நீட் தேர்வில் உள்ளாடையைக் களையச்சொன்ன விவகாரம்: மறுப்பு தெரிவித்து என்டிஏ விளக்கம்

இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு தேசியத் தேர்வுகள் முகமை மறுப்பு தெரிவித்துள்ளது.  இதுகுறித்து என்டிஏ தெரிவித்துள்ளதாவது:

''கேரள கல்லூரியில் நீட் தேர்வு அன்று ஆடையளைக் களையச் சொன்னதாக எழுந்த புகாரில் பின்வரும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. 

இந்த அறிக்கையின்படி, மைய கண்காணிப்பாளர், சுயாதீன பார்வையாளர் மற்றும் கொல்லம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அத்தகைய சம்பவம் நடந்தது எதையும் கண்டுபிடிக்கவில்லை. சம்பந்தப்பட்ட மாணவி தேர்வை எழுதி உள்ளார். 

தேர்வின்போது, அதற்குப் பிறகும் யாரும் இதுதொடர்பாக எந்தப் புகாரையும் அளிக்கவில்லை. தேசியத் தேர்வுகள் முகமைக்கு எந்த விதமான இ-மெயிலோ, புகார்க் கடிதமோ வரவில்லை. 

தேசியத் தேர்வுகள் முகமையின் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளின்படி, மாணவியின் பெற்றோரின் குற்றச்சாட்டு தொடர்பாக செயல்பாடை என்டிஏ அனுமதிக்கவில்லை. 

ஆடைக் கட்டுப்பாட்டு விதிகள், தேர்வு முறையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்யவே கடைப்பிடிக்கப்படுகின்றன. எனினும் தேர்வர்களை சோதனை செய்து, பாலின/ மத/ கலாச்சார / பிராந்திய உணர்வுகளை புண்படுத்துவது நோக்கமல்ல''. 

இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

AI: ’’பெரியவங்க பேச்சை கேட்காதீங்க
AI: ’’பெரியவங்க பேச்சை கேட்காதீங்க" - இளைஞர்களுக்கு OpenAI சிஇஓ அறிவுரையால் சர்ச்சை!
Anna University: அரசே தொடர்ந்து உதாசீனமா? அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியர்களை உடனே பணி நியமனம் செய்க; ராமதாஸ்!
Anna University: அரசே தொடர்ந்து உதாசீனமா? அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியர்களை உடனே பணி நியமனம் செய்க; ராமதாஸ்!
சிவகங்கை சிறுவர்களுக்கு கலைத்திறன் போட்டி: குரலிசை, நடனம், ஓவியம் - வாய்ப்பை தவறவிடாதீர்!
சிவகங்கை சிறுவர்களுக்கு கலைத்திறன் போட்டி: குரலிசை, நடனம், ஓவியம் - வாய்ப்பை தவறவிடாதீர்!
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அனைத்து சலுகைகளும் கிடைக்குமா?
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அனைத்து சலுகைகளும் கிடைக்குமா?
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடியின் 15 லட்சம் வாக்குறுதி என்னாச்சு? அதிமுக எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது: அமைச்சர் இ. பெரியசாமி பரபரப்பு பேட்டி!
மோடியின் 15 லட்சம் வாக்குறுதி என்னாச்சு? அதிமுக எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது: அமைச்சர் இ. பெரியசாமி பரபரப்பு பேட்டி!
கன்னியாகுமரியில் IT புரட்சி! டைடல் நியோ பூங்கா: இளைஞர்களின் கனவு நனவாகுமா? வேலைவாய்ப்பு உறுதி!
கன்னியாகுமரியில் IT புரட்சி! டைடல் நியோ பூங்கா: இளைஞர்களின் கனவு நனவாகுமா? வேலைவாய்ப்பு உறுதி!
Nallakannu: ஆயுதம் ஏந்தி.. போராட்டங்களால் நிறைந்த நல்லகண்ணு வாழ்க்கை; மீசையே வைக்காத காரணம் தெரியுமா?
Nallakannu: ஆயுதம் ஏந்தி.. போராட்டங்களால் நிறைந்த நல்லகண்ணு வாழ்க்கை; மீசையே வைக்காத காரணம் தெரியுமா?
Nissan Tekton Review: மாஸ் காட்டப்போகும் நிசான்.. வரப்போது Nissan Tekton - விலை எவ்ளோ தெரியுமா?
Nissan Tekton Review: மாஸ் காட்டப்போகும் நிசான்.. வரப்போது Nissan Tekton - விலை எவ்ளோ தெரியுமா?
Nallakannu Death: இவர்தான் மாமனிதன்..! நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
Nallakannu Death: இவர்தான் மாமனிதன்..! நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
Lunar Eclipse 2026: சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!
Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!
Nallakannu Death: முடிவுக்கு வந்த நூற்றாண்டு சகாப்தம்.. விடைபெற்றார் தோழர் நல்லகண்ணு!
Nallakannu Death: முடிவுக்கு வந்த நூற்றாண்டு சகாப்தம்.. விடைபெற்றார் தோழர் நல்லகண்ணு!
Embed widget